December 6, 2025, 12:07 AM
26 C
Chennai

மதபோதகரின் மன்மத லீலைகள்! மனைவியிடம் சிக்கிய வீடியோக்கள்.. 15 பிரிவில் வழக்குப் பதிவு!

Andrew Praveen Satish - 2025

கன்னியாகுமரியில் கருங்கல் அடுத்த இலவுவிளையில் திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையில் தலைமை போதகராகவும், மருத்துவராக இருக்கிறார் ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ்.

இவர் முகநூல் மூலமாக பெண்களை வளைத்து அவர்களுடன் பாலியல் உறவில் இருப்பதாக முகநூல் மூலமாக காதலித்து பணத்தையும், நகையையும் இழந்த 2வது மனைவி நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து ஆண்ட்ரூ பிரவீன் சதீஷும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்.

தூத்துக்குடி குலசேகரபட்டினத்தை சேர்ந்த ஜான்சிராணி பி.எஸ்.சி. முடித்துவிட்டு 2010 முதல் 2018 வரையிலும் மொரிஷியஸில் உள்ள மருத்துவமனையில் வேலைசெய்து வந்துள்ளார். இவருக்கு ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் முகநூல் மூலமாக நட்பாகியுள்ளார்.
நாளடைவில் காதலர்களாகி கல்யாணமும் நடந்துவிட்டது.

2018ல் தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக்கொண்ட இவர்கள், 2019ல் சென்னை மெரியமேட்டில் சார்பதிவாளர் அலுவலத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில்தான் ஆண்ட்ரூவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பதும் அவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஆண்ட்ரூவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. பெண்களுடன் பாலியல் உறவில் இருந்த வீடியோவும் போட்டோக்களும் ஜான்சிராணியிடம் சிக்கின.

தனது தந்தையிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்றது மட்டுமல்லாமல், மருத்துவமனையை டெவலப் செய்ய வேண்டும் என்று தன்னிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் பணமும், 40 பவுன் நகைகளும் பெற்றது பெண்களுடன் தவறான உறவில் இருப்பதற்குத்தானா என்று நினைத்த ஜான்சிராணி, தான் ஏமாந்துவிட்டதை உணர்ந்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான்சிராணி. புகாரின் பேரில் உள்ள உண்மை விபரத்தினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை அடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், ஆண்ட்ரு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 15 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தகவலறிந்து ஆண்டுரூவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தான் ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கதறி அழுதிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories