மதபோதகரின் மன்மத லீலைகள்! மனைவியிடம் சிக்கிய வீடியோக்கள்.. 15 பிரிவில் வழக்குப் பதிவு!

Andrew Praveen Satish - 2026

கன்னியாகுமரியில் கருங்கல் அடுத்த இலவுவிளையில் திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையில் தலைமை போதகராகவும், மருத்துவராக இருக்கிறார் ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ்.

இவர் முகநூல் மூலமாக பெண்களை வளைத்து அவர்களுடன் பாலியல் உறவில் இருப்பதாக முகநூல் மூலமாக காதலித்து பணத்தையும், நகையையும் இழந்த 2வது மனைவி நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து ஆண்ட்ரூ பிரவீன் சதீஷும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்.

தூத்துக்குடி குலசேகரபட்டினத்தை சேர்ந்த ஜான்சிராணி பி.எஸ்.சி. முடித்துவிட்டு 2010 முதல் 2018 வரையிலும் மொரிஷியஸில் உள்ள மருத்துவமனையில் வேலைசெய்து வந்துள்ளார். இவருக்கு ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் முகநூல் மூலமாக நட்பாகியுள்ளார்.
நாளடைவில் காதலர்களாகி கல்யாணமும் நடந்துவிட்டது.

2018ல் தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக்கொண்ட இவர்கள், 2019ல் சென்னை மெரியமேட்டில் சார்பதிவாளர் அலுவலத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில்தான் ஆண்ட்ரூவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பதும் அவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஆண்ட்ரூவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. பெண்களுடன் பாலியல் உறவில் இருந்த வீடியோவும் போட்டோக்களும் ஜான்சிராணியிடம் சிக்கின.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

தனது தந்தையிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்றது மட்டுமல்லாமல், மருத்துவமனையை டெவலப் செய்ய வேண்டும் என்று தன்னிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் பணமும், 40 பவுன் நகைகளும் பெற்றது பெண்களுடன் தவறான உறவில் இருப்பதற்குத்தானா என்று நினைத்த ஜான்சிராணி, தான் ஏமாந்துவிட்டதை உணர்ந்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான்சிராணி. புகாரின் பேரில் உள்ள உண்மை விபரத்தினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை அடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், ஆண்ட்ரு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 15 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தகவலறிந்து ஆண்டுரூவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தான் ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கதறி அழுதிருக்கிறார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories