மதபோதகரின் மன்மத லீலைகள்! மனைவியிடம் சிக்கிய வீடியோக்கள்.. 15 பிரிவில் வழக்குப் பதிவு!

Andrew Praveen Satish - 2026

கன்னியாகுமரியில் கருங்கல் அடுத்த இலவுவிளையில் திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையில் தலைமை போதகராகவும், மருத்துவராக இருக்கிறார் ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ்.

இவர் முகநூல் மூலமாக பெண்களை வளைத்து அவர்களுடன் பாலியல் உறவில் இருப்பதாக முகநூல் மூலமாக காதலித்து பணத்தையும், நகையையும் இழந்த 2வது மனைவி நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து ஆண்ட்ரூ பிரவீன் சதீஷும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்.

தூத்துக்குடி குலசேகரபட்டினத்தை சேர்ந்த ஜான்சிராணி பி.எஸ்.சி. முடித்துவிட்டு 2010 முதல் 2018 வரையிலும் மொரிஷியஸில் உள்ள மருத்துவமனையில் வேலைசெய்து வந்துள்ளார். இவருக்கு ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் முகநூல் மூலமாக நட்பாகியுள்ளார்.
நாளடைவில் காதலர்களாகி கல்யாணமும் நடந்துவிட்டது.

2018ல் தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக்கொண்ட இவர்கள், 2019ல் சென்னை மெரியமேட்டில் சார்பதிவாளர் அலுவலத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில்தான் ஆண்ட்ரூவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பதும் அவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஆண்ட்ரூவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. பெண்களுடன் பாலியல் உறவில் இருந்த வீடியோவும் போட்டோக்களும் ஜான்சிராணியிடம் சிக்கின.

தனது தந்தையிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்றது மட்டுமல்லாமல், மருத்துவமனையை டெவலப் செய்ய வேண்டும் என்று தன்னிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் பணமும், 40 பவுன் நகைகளும் பெற்றது பெண்களுடன் தவறான உறவில் இருப்பதற்குத்தானா என்று நினைத்த ஜான்சிராணி, தான் ஏமாந்துவிட்டதை உணர்ந்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான்சிராணி. புகாரின் பேரில் உள்ள உண்மை விபரத்தினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை அடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், ஆண்ட்ரு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 15 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தகவலறிந்து ஆண்டுரூவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தான் ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கதறி அழுதிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories