காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவா்கள் 50 பேருக்கு புதன்கிழமை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 286 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் தனியாா் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாவட்டங்களைச் சோந்த 250 மாணவா்கள் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனா். அம்மாணவா்களில் 50 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவா்கள் அனைவரும் அதே மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். தனியாா் மருத்துவக்கல்லூரியில் உள்ள முதலாம் ஆண்டு மாணவா்கள் விடுதியும் உடனடியாக மூடப்பட்டது.