நிச்சயமான பெண் திருமணத்திற்கு மறுப்பு! மனமுடைந்து தீக்குளித்த பிஇ பட்டதாரி!

fair
fair

தனக்கு பார்க்கப்பட்ட பெண் வீட்டில் திருமணத்துக்கு தீடீரென மறுப்பு தெரிவித்ததால், பொறியியல் பட்டதாரி இளைஞர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், வாங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினரின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 29). இவர், பொறியியல் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே, திருமண வயதை நெருங்கிய தமிழ்ச்செல்வனுக்கு, அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். நிறைய இடத்தில் பெண் பார்த்தும், அவருக்கு பெண் அமையவில்லை.

அதன்பிறகு, ஒரு இடத்தில் பெண் பார்த்து, முடிவாகி திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரண்டு வீடுகளின் தரப்பில் சேர்ந்து நிச்சயதார்த்தமும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதில் பெண் வீட்டார் நிச்சயித்த திருமணத்தை திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் கடந்த 17 – ம் தேதி தமிழ்ச்செல்வன் மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு, தீக்குளித்தார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

வெங்கமேடு காவல் நிலையம்
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, தமிழ்செல்வனை மீட்டு, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கு 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். இது குறித்து, கரூர் வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் வீட்டில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், பொறியியல் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியான இந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகபட வைத்திருக்கிறது. எனினும் போலீஸ் விசாரணையின் முடிவில் தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories