February 22, 2026, 7:44 AM
25.4 C
Chennai

ஆட்சியைப் பிடிக்க ஆதினத்திடம் சென்று ஆசி! பகுத்தறிவு பட்டுப்போன காட்சி!

Screenshot 2021 0429 150601
Screenshot 2021 0429 150601

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையான பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு என்பது என்ன ஆனது என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து கடவுள்களையும் இந்து சமய சடங்குகளையும் அவதூறாக பேசி வருவதை தங்கள் ஒரே குறிக்கோளாக கடைப்பிடித்து வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் இந்துக்கள் அனைவரது மனமும் புண்படும்படி பேசி வருகின்றனர்.

ஆனால் தி.மு.க. தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அண்மையில் கூட கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை செய்யப்பட்ட போதிலும் தி.மு.க. தலைவரின் மகள் சிறப்பு அனுமதி பெற்று கிரிவலம் சென்று வந்தது நாம் அறிந்த ஒன்றே. அதுவும் தந்தைக்காக சென்றாராம்‌.

அதேபோல் தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தி தன்னை ஒரு இந்துக்களுக்கு ஆதரவானவர் என்பது போல் காட்டிக் கொண்டதையும் நாம் அறிவோம். இந்நிலையில் தற்போது திமுக முன்னாள் அமைச்சர்கள்

K.N.நேரு மற்றும் M.R.K.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆதீனத்திடம் சென்று ஆசி பெற்று இருப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories