ஆட்சியைப் பிடிக்க ஆதினத்திடம் சென்று ஆசி! பகுத்தறிவு பட்டுப்போன காட்சி!

Screenshot 2021 0429 150601
Screenshot 2021 0429 150601

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையான பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு என்பது என்ன ஆனது என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து கடவுள்களையும் இந்து சமய சடங்குகளையும் அவதூறாக பேசி வருவதை தங்கள் ஒரே குறிக்கோளாக கடைப்பிடித்து வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் இந்துக்கள் அனைவரது மனமும் புண்படும்படி பேசி வருகின்றனர்.

ஆனால் தி.மு.க. தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அண்மையில் கூட கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை செய்யப்பட்ட போதிலும் தி.மு.க. தலைவரின் மகள் சிறப்பு அனுமதி பெற்று கிரிவலம் சென்று வந்தது நாம் அறிந்த ஒன்றே. அதுவும் தந்தைக்காக சென்றாராம்‌.

அதேபோல் தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தி தன்னை ஒரு இந்துக்களுக்கு ஆதரவானவர் என்பது போல் காட்டிக் கொண்டதையும் நாம் அறிவோம். இந்நிலையில் தற்போது திமுக முன்னாள் அமைச்சர்கள்

K.N.நேரு மற்றும் M.R.K.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆதீனத்திடம் சென்று ஆசி பெற்று இருப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories