December 6, 2025, 7:40 AM
23.8 C
Chennai

பேருந்தின் அடி கம்பியில் மாட்டிய நபர்! 1கிலோ மீட்டருக்கு பின் மீட்பு!

thoppur-vehcle-accident-1_std original
file pic

சேலத்தில் சாலையோரம் மனைவியுடன் பைக்கில் வந்தபோது தனியார் பஸ் மோதி, அதன் அடியில் சிக்கி கம்பியில் 1 கிலோ மீட்டர் தூரம் தொங்கியபடி தனியார் நிறுவன ஊழியர் உயிர் பிழைத்தார்.

சேலம் கொண்டலாம்பட்டி ஆர்.ஆர்.பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (43), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சத்யா (40), குள்ளமுடையானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.

இவர்கள் இருவரும் நேற்று வீட்டில் இருந்து பைக்கில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றனர். திருவாகவுண்டனூர் பை-பாஸ் திருப்பத்தில் சென்றபோது, மழையின் காரணமாக ரோட்டில் தண்ணீர் தேங்கியிருந்துள்ளது.

அந்த பகுதியை கடந்தபோது, பின்னால் கரூரில் இருந்து சேலம் வந்த தனியார் பஸ் கடந்தது. பாதியளவு பஸ் முன்னே சென்றநிலையில், பின்பகுதி கடந்தபோது பைக்கின் மீது லேசாக உரசிச் சென்றது. இதில், பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

வலது புறம் சரிந்த கார்த்திக், பஸ்சின் அடியில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக சக்கரத்தில் சிக்காமல், நடுப்பகுதியில் இரண்டு சக்கரத்திற்கு இணைப்பாக இருக்கும் கம்பியில், கார்த்திக் தொங்கிக் கொண்டார்.

இதை அறியாத டிரைவர், பஸ்சை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். சித்ரா கூச்சலிடவே, பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பஸ்சை விரட்டி சென்றனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கடந்தநிலையில் 3 ரோடு பகுதியில் பஸ்சை நிறுத்தி விவரத்தை கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் கரூரை சேர்ந்த வெங்கடேஷ், பஸ்சை அங்கேயே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். பின்னர், பஸ்சின் அடியில் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories