விமானப் பயணத்தில் மூச்சுத் திணறல் மயக்கம்: உதவிய கனிமொழிக்கு சக பெண் பயணி நன்றி

KANIMOZHI_MPசென்னை: விமானப் பயணத்தின் போது மயக்கம் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பெண் பயணி ஒருவருக்கு முதலுதவி ஏற்பாடு செய்த கனிமொழிக்கு அந்தப் பெண் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். தி.மு.க. மகளிரணிச் செயலரும் எம்.பி.யுமான கனிமொழி நேற்று கோவை சென்று விட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, விமானத்தில் உடன் பயணம் செய்த சக பெண் பயணி ஒருவர் தனக்கு மயக்கமும், மூச்சு திணறலும் ஏற்படுவதாகத் தெரிவித்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி தைரியமூட்டிய கனிமொழி, விமானம் சென்னை வந்ததும் முதலுதவிக்கு ஏற்பாடு செய்தார். மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்தனர். அந்தப் பயணி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதை அடுத்து அந்தப் பெண்ணை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்த கனிமொழி, தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கும்படி கூறினாராம். மேலும் சிகிச்சைக்கான செலவை வழங்குவதாகக் கூறியதையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று உடல்நலம் தேறிய அந்தப் பெண், மருத்துவமனையில் இருந்து வந்ததும், கனிமொழியிடம் தன் நன்றியைத் தெரிவித்தார். அந்தப் பெண் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ‘ஸ்வர்ணம் கவுர்’ என்பதும், அங்கே அவர் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருவதும் தெரியவந்தது. பின்னர் அவர் தில்லி புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories