கோவிலுக்கு சொந்தமான ரூ.60000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு!

land
land

₹.ரூ.60,000 கோடி மதிப்புள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தை அடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களில் திருப்போரூரில் உள்ள 31 சென்ட் நிலத்தை அறநிலையத் துறை மீட்டுள்ளது.

திருப்போரூர் முருகன் கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தான் அறக்கட்டளை கோவிலுக்கு சொந்தமாக ₹ரூ.60,000 கோடி மதிப்பில் 2,000 ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அரசியல் கட்சியினர் உட்பட முக்கியமான இடங்களில் அமைந்துள்ள இந்த சொத்துகளை அபகரிக்க பலர் முயற்சி செய்துள்ளனர்.

கோவில் சொத்துக்களை மீட்க பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருப்போரூர் பகுதியில் உள்ள கோவில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து நீதிமன்றம் கோவில் நிலங்களுக்கான பத்திரப்பதிவை நிறுத்தி உத்தரவிடப்பட்டது.

அதன் பின்னர் இத்தகைய முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதல் கட்டமாக மாமல்லபுரம் ஆளவந்தான் கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகள் அளவீடு செய்யப்பட்டன.

திருப்போரூரைச் சுற்றியுள்ள கண்ணகப்பட்டு, வேம்படி விநாயகர் கோவில் தெரு, சந்து தெரு, சவுபாக்கியா நகர் தனியார் குடியிருப்பு அருகில் உள்ள இடங்கள், நெம்மேலி செல்லும் சாலை, மலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான 512 ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளன. இவற்றை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து வருகின்றனர்.

அளவீட்டுப் பணியின் போது திருப்போரூர் பேரூராட்சி, திருவஞ்சாவடி தெருவில் 31 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து அமைத்திருந்த ஷெட்டை இழுத்து மூடி அறநிலையத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories