பொதுமக்கள் கோரிக்கை; மறுநாளே நிறைவேற்றம்: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ., அதிரடி ‘சிக்ஸர்’!

nainar nagendran - 2026

நெல்லை அருகே பொதுமக்கள் கோரிக்கை விடுத்த மறுநாளே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நிறைவேற்றியுள்ளார்.

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே பழவூர் கிராமத்திற்கு நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்றிருந்தார். அப்போது அப்பகுதி மக்கள் அவரிடம் எங்கள் தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உடனடியாக பாப்பாக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று காலை பழவூர் கிராமத்துக்கு பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி நேரில் வந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். அடுத்து, தெருவிளக்கு குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தார். சிறிது நேரத்தில் கிராமத்தில் பழுதாகி உள்ள தெருவிளக்குகள் சரிசெய்யும் பணி தொடங்கியது. மேலும் பல இடங்களில் புதிய தெரு விளக்குகள் பொருத்தும் பணியும் நடைபெற்றது.

இதேபோல் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உடனடியாக அடைப்பு சரிசெய்யப்பட்டது. அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யும் பணி உடனே தொடங்கியது.

கோரிக்கை வைத்த உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மறுநாளே அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் நடவடிக்கைக்கு அப்பகுதி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது பழவூர் கிராம எழுத்தர் கந்தசாமி மாணவர் ஒன்றிய பாஜக தலைவர் அங்குராஜ், ராணுவப் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், ஒன்றிய நிர்வாகி கோபிநாத், பழவூர் பாஜக தலைவர் அருணாசலம், பழவூர் சதீஷ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories