December 6, 2025, 2:39 AM
26 C
Chennai

வேளாண் சட்ட விவகாரத்தில் முரண்டு! ஆளுநருடன் மல்லுக் கட்டி… தீர்மானத்துடன் நிறுத்திக் கொள்ள தீர்மானித்த ஸ்டாலின்!

governor purohit - 2025

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில், ஆளுநர் உரையில் இடம்பெறச் செய்ய திட்டமிட்ட ஸ்டாலினின் எண்ணம் நிறைவேறவில்லை. ஆளுநருடன் மல்லுக்கட்டி, இறுதியில் சட்டமன்றத் தீர்மானத்துடன் நிறுத்திக் கொள்ளத் தீர்மானித்தார் ஸ்டாலின்.

வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்-முதலமைச்சர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர் தமிழரசி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

governor speech in tn assembly - 2025

அப்போது விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், அந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள உழவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெறும் தீர்மானமும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

இதனிடையே, ஆளுநர் உரையில் திருத்தம் அனுமதித்த பிறகே, ஆளுநர் சட்டமன்றத்தில் உரை அளித்தார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரை இரு தினங்களுக்கு முன் ஆளுநரிடம் வழங்கப்பட்டது. அதில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதை வாசிக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு வந்து ஆளுநரிடம் பேசினார். ஆனாலும் ஆளுநர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். தலைமைச் செயலாளர் அங்கிருந்தபடி முதல்வரிடம் பேசினார்.

நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு அந்த வாசகங்களை நீக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதித்துள்ளார். அதைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பான வாசகங்கள் நீக்கப்பட்டு புதிய ஆளுநர் உரை அவசரமாக தயாரிக்கப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதை ஏற்று சட்டசபைக்கு வர ஆளுநர் சம்மதித்துள்ளார். ஆளுநர் வாசித்த உரையில் வேளாண் சட்டங்கள் குறித்த வாசகங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories