அழகர் ஆலயம் திறந்தும் அன்பர்கள் அதிகமில்லை! அச்சம் தான் காரணமா?!

alagar koil - 2026

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் உள்ளிட்ட திருக்கோவில்களில் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். ஆயினும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்படுகின்றது!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருவதையொட்டி, தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்ததின் காரணமாக, கடந்த 80 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் பல்வேறு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நேற்று முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், 

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதக்கூடிய அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோவில், ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்களில் கிருமி நாசினி தெளித்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன!

noopuragangai
noopuragangai

இதனைத் தொடர்ந்து இத்திருத்தலங்களில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உத்ஸவர், பரிகார மூர்த்தி ஆகியோர்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இந் நிலையில், பக்தர்கள் முககவசம் அணிந்து, கிருமி நாசினி, மற்றும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு மட்டும்  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்! 

மேலும் அழகர்கோவிலில் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவில், ராக்காயி அம்மன் கோவில், பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தம், அனுமன் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் தீர்த்தமாடவும், திருக்கோவில் வளாகத்தில் கிடா மற்றும் பொங்கல் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டும் வருகின்றது!

80 நாட்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சம் காரணமாக திருக்கோவில்களில் பக்தர்களின் வருகை குறைவாகவே உள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories