அழகர் ஆலயம் திறந்தும் அன்பர்கள் அதிகமில்லை! அச்சம் தான் காரணமா?!

alagar koil - 2026

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் உள்ளிட்ட திருக்கோவில்களில் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். ஆயினும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்படுகின்றது!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருவதையொட்டி, தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்ததின் காரணமாக, கடந்த 80 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் பல்வேறு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நேற்று முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், 

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதக்கூடிய அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோவில், ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்களில் கிருமி நாசினி தெளித்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன!

noopuragangai
noopuragangai

இதனைத் தொடர்ந்து இத்திருத்தலங்களில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உத்ஸவர், பரிகார மூர்த்தி ஆகியோர்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இந் நிலையில், பக்தர்கள் முககவசம் அணிந்து, கிருமி நாசினி, மற்றும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு மட்டும்  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்! 

மேலும் அழகர்கோவிலில் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவில், ராக்காயி அம்மன் கோவில், பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தம், அனுமன் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் தீர்த்தமாடவும், திருக்கோவில் வளாகத்தில் கிடா மற்றும் பொங்கல் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டும் வருகின்றது!

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

80 நாட்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சம் காரணமாக திருக்கோவில்களில் பக்தர்களின் வருகை குறைவாகவே உள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories