December 5, 2025, 1:36 PM
26.9 C
Chennai

தென்காசி கோயில் இடத்தில் பள்ளிவாசல்! முதல்வர், அமைச்சருக்கு இந்து முன்னணி கோரிக்கை மனு!

hindumunnani protest tenkasi4 - 2025

தென்காசி மாவட்டம், தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு மிக அருகில், கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தை, அதை பராமரித்து வந்த நபரிடம் இருந்து பெற்று, இஸ்லாமியர்கள் அதைத் தொழுகைக் கூடமாக மாற்றி, தொழுது வந்தனர்.

இந்தக் கட்டடத்தை புனரமைக்க அனுமதி கேட்டு இஸ்லாமியர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் எந்த புனரமைப்புப் பணிகளும் அதில் மேற்கொள்ளக் கூடாது என்றும், இப்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

tenkasi pallivasal - 2025

இந்த நிலையில் தி.மு.கவைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தை சார்ந்த நபர் ஒருவர், இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் இருக்கும் அந்த தொழுகை பள்ளிவாசலை புனரமைக்க இந்துக்களிடம் சமாதான குழு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

hindumunnani protest tenkasi2 - 2025

இந்தக் கடிதம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே தென்காசி நகரில் தற்போது நிலவி வரும் அமைதியான சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதி அதை சமூக ஊடகங்களில் பரப்பியவர்களைக் கண்டித்தும், மேற்படி தொழுகை இடம் சம்மந்தமாக கிடைக்கப் பெற்ற நீதிமன்ற உத்தரவை என்றென்றும் காத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.

இந்தக் கோரிக்கை மனுவை இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள், காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சமர்ப்பித்து, மனுவை வைத்து கூட்டு பிராத்தனை செய்து, அந்த மனுவை தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர்.

hindumunnani protest tenkasi1 - 2025

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் சாக்ரடீஸ், தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, வழக்கறிர் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ், செங்கோட்டை ஒன்றிய தலைவர் குளத்தூரான், செயலாளர் பூபதி, கடையநல்லூர் ஒன்றிய தலைவர் கார்த்திக், தென்காசி நகர தலைவர் நாராயணன், துணை தலைவர் சொர்ண சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories