தென்காசி கோயில் இடத்தில் பள்ளிவாசல்! முதல்வர், அமைச்சருக்கு இந்து முன்னணி கோரிக்கை மனு!

hindumunnani protest tenkasi4 - 2026

தென்காசி மாவட்டம், தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு மிக அருகில், கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தை, அதை பராமரித்து வந்த நபரிடம் இருந்து பெற்று, இஸ்லாமியர்கள் அதைத் தொழுகைக் கூடமாக மாற்றி, தொழுது வந்தனர்.

இந்தக் கட்டடத்தை புனரமைக்க அனுமதி கேட்டு இஸ்லாமியர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் எந்த புனரமைப்புப் பணிகளும் அதில் மேற்கொள்ளக் கூடாது என்றும், இப்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

tenkasi pallivasal - 2026

இந்த நிலையில் தி.மு.கவைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தை சார்ந்த நபர் ஒருவர், இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் இருக்கும் அந்த தொழுகை பள்ளிவாசலை புனரமைக்க இந்துக்களிடம் சமாதான குழு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

hindumunnani protest tenkasi2 - 2026

இந்தக் கடிதம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே தென்காசி நகரில் தற்போது நிலவி வரும் அமைதியான சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதி அதை சமூக ஊடகங்களில் பரப்பியவர்களைக் கண்டித்தும், மேற்படி தொழுகை இடம் சம்மந்தமாக கிடைக்கப் பெற்ற நீதிமன்ற உத்தரவை என்றென்றும் காத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.

இந்தக் கோரிக்கை மனுவை இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள், காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சமர்ப்பித்து, மனுவை வைத்து கூட்டு பிராத்தனை செய்து, அந்த மனுவை தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!
hindumunnani protest tenkasi1 - 2026

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் சாக்ரடீஸ், தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, வழக்கறிர் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ், செங்கோட்டை ஒன்றிய தலைவர் குளத்தூரான், செயலாளர் பூபதி, கடையநல்லூர் ஒன்றிய தலைவர் கார்த்திக், தென்காசி நகர தலைவர் நாராயணன், துணை தலைவர் சொர்ண சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories