January 14, 2025, 2:31 AM
25.6 C
Chennai

தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள், பாலியல் மிரட்டல்கள்.. நடிகைப் புகார்!

முகம் தெரியாத சிலர், பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுப்பதாகவும் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றி இருப்பதாகவும் டிவி நடிகை புகார் தெரிவித்துள்ளார்

பிரபல வங்கமொழி நடிகை பிரதியுஷா பால். டி.வி.தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் சிலர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

நடிகையின் புகைப்படங்கள் சிலவற்றை மார்பிங் செய்து ஆபாச இணைய தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் நடிகை பிரதியுஷா பால் புகார் கொடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, சமூக வலைதளம் மூலம் கடந்த ஒரு வருடமாக இந்த மிரட்டல் வருகிறது.

பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கும் நபரை, நான் பிளாக் செய்தால், மறுநாள் வேறு ஐடியில் இருந்து வந்து அதே மிரட்டல் வேலையை செய்கிறார். ஆரம்பத்தில் நான் இதைக் கண்டு கொள்ளவில்லை.

அவர்கள் எனது புகைப்படங்களை மார்பிங் ஆபாச இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதோடு என் தாய் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளனர். இதனால் இப்போது சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஃபெங்கல் புயல்: வட தமிழகத்தில் கன மழை! எச்சரிக்கை நடவடிக்கைகள்!

போலீசார், நடிகையின் புகார் பற்றி விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். நடிகை ஒருவர் இப்படி பகீர் புகார் ஒன்றைக் கூறியிருப்பது வங்கமொழி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.14- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

தேவகோட்டை பள்ளியில் தேசிய இளைஞர் தினம் போட்டிகள்!

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின்

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.

ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பெடிஷன்

பொங்கல் ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பெடிஷன் -***