சமூக விரோதிகளின் கூடாரம் ஆனதா டெலிகிராம்.‌?

telegram
telegram

சமூக ஊடக செயலிகளில் ஒன்றாக டெலிகிராம் டார்வ் வெப்க்கு மாற்றாக குற்றச் செயல்களுக்கான தளமாக உருவெடுத்துவருவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

நாம் தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் இணையத்தை சர்ஃபேஸ் வெப் (Surface web) என்கிறோம். இவை வெளிப்படையானது. நாம் தேடும் விவரங்களை சில லிங்க்களை கிளிக் செய்வது மூலம் சில நொடிகளில் அறிந்துகொள்ளலாம்.

ஆனால், இதையும் தாண்டிய இருள் உலகம் ஒன்று இணையத்தில் உண்டு. இதனை டார்க் வெப் என்று அழைக்கிறோம். டீப் வெப் (Deep web) என்னும் சமுத்திரத்தின் ஒரு பகுதிதான் இந்த டார்க் வெப்.

டார்க் வெப் மூலம் ஒருவர் எவ்வித் அடையாளத்தையும் வெளிப்படுத்தாமல் தனக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும், ஆயுத கடத்தல், தீவிரவாத செயல்கள், போதை மருந்து விற்பனை, குழந்தைகள் கடத்தல் என இந்த டார்க் வெப்பை (Dark web) பயன்படுத்தி பல சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

இதுவரை டார்க் வெப் மூலம் நடைபெற்ற இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் தற்போது டெலிகிராம் மூலம் நடைபெறத் தொடங்கியுள்ளதாக பகிர் தகவல் வெளியாகியுள்ளது.

திருடப்பட்ட தரவு மற்றும் ஹேக்கிங் கருவிகளை வாங்க, விற்க மற்றும் பகிர விரும்பும் இணைய குற்றவாளிகளின் மையமாக டெலிகிராம் உருவெடுத்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தி பைனான்சியல் டைம்ஸ் மற்றும் சைபரிண்ட் என்ற பிரபல சைபர் புலனாய்வு அமைப்பு இணைந்து நடத்திய புலன் விசாரணையில் இது தெரியவந்தது.

டார்க் வெப்பில் காணப்படும் பல்வேறு கள்ளச்சந்தைகள் டெலிகிராம் மூலமும் அணுகப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதோடு, சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவது 100 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

டெலிகிராம் (Telegram) செயலியின் என்கிரிப்டட் தகவல் அனுப்பும் முறை டார்க் வெப்பை விட பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதாக கூறப்படுகிறது.
டார்க் வெப்பை பயன்படுத்துவது என்பது அனைவருக்கும் எளிமையானது அல்ல.

ஆனால் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவது என்பது மிகவும் எளிமையானது. சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப்பில் (whatsapp) பிரைவெஸ்ஸி தொடர்பாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து பலரும் டெலிகிராம் செயலிக்கு மாறினர். இதைத் தொடர்ந்து அந்த செயலியின் பயன்பாடும் அதிகரித்தது.

புதிதாக ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை டெலிகிராம் மூலம் பழக்கம் பலரிடம் அதிகரித்து வருவதை நாம் காணமுடியும். ஒரு குழுவில் 2 லட்சம் பின் தொடர்பவர்கள் வரை இணைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 47 ஆயிரம் பின் தொடர்பவர்கள் உள்ள ஒரு டெலிகிராம் க்ரூப்பில் திருடப்பட்ட பாஸ்வேர்ட்கள், இ.மெயில் ஐ.டி. போன்றவை விற்கப்பட்டது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருடப்பட்ட தகவல்கள் குறிக்க ஹேக்கர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வார்த்தைகளின் பயன்பாடு என்பது கடந்த ஆண்டை இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல், டெலிகிராம் குழுவில் இணைவதற்கான லிங்க்கள் டார்க் வெப்பில் பகிரப்படுவதும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories