மகனை கடத்திய மருமகள் வீட்டார்! மீட்க வேண்டி பெற்றோர் புகார்!

parent
parent

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தங்களது மகனை, கடத்திச்சென்று துன்புறுத்தும் மருமகள் வீட்டார் மீது நடவடிக்கை கோரி ஈரோடு மாவட்ட எஸ்.பி-யிடம், பெற்றோர் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று பவானி லோகநாதன் ஹாஸ்பிடல் ரோடு பகுதியை சேர்ந்த யோகவேலு – இந்திராணி தம்பதியினர் வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், தங்களது மகன் நரேஷ் கிருஷ்ணாவுக்கு, வேலூரை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்ததாகவும், பின்னர் மருமகள் நடத்தை சரியில்லாததாலும், கருத்து வேறுபாடு காரணமாகவும் கணவன் – மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்

மேலும், நீதிமன்றத்தில் விவாக ரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு முடிவெட்டும் கடைக்கு சென்ற நரேஷ் கிருஷ்ணாவை, மருமகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அடியாட்கள் தாக்கி, வேலூருக்கு கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ள அவர்கள், இதுகுறித்து தங்களது புகாரின் பேரில் கோபி போலீசார், மருமகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு நரேஷ் கிருஷ்ணாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்க கூறியும், அவர்கள் ஒப்படைக்க வில்லை என்று கூறி உள்ளனர்.

மேலும், மருமகள் குடும்பத்தினர் தங்களது மகனை அடித்து சித்திரவதை செய்து பல லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், தங்களையும் வேலூருக்கு வரும்படி மிரட்டுவதாகவும், அவ்வாறு சென்றால் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

எனவே போலீசார் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்தும், கடத்தப்பட்ட மகனை உயிருடன் மீட்டுத்தரவும் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories