கோவிலுக்குள் செருப்பணிந்த கிறிஸ்துவ மருத்துவர்! இந்து ஒற்றுமையை நிலை நாட்டிய கிராம மக்கள்!

Published:

vellur 1
vellur 1

வேலூரில் உள்ள போகோய் கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ மருத்துவர் கோவிலுக்குள் காலணிகளை அணிந்ததால் சர்ச்சை வெடித்துள்ளது.

கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக கிராமத்திற்குச் சென்ற குழுவில் கிறிஸ்தவ மருத்துவரும் சென்றுள்ளார். பலமுறை மக்கள் முறையிட்ட போதிலும், மருத்துவர் தனது காலணிகளை கழற்ற மறுத்ததால், கோபமடைந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவர் கோவிலை விட்டு வெளியேறும் வரை தடுப்பூசி போட மறுத்தனர்.

உள்ளூர் மக்களின் தகவல்படி, பொய்கை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் வேலூர் அரசு மருத்துவமனையால் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவமனையில் பணிபுரியும் கிறிஸ்தவ மருத்துவர் ரெஜினா, கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக கிராமத்திற்கு அனுப்பப்பட்ட குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.

கோவிலுக்குள் முகாம் நடத்தப்பட்டதால், மற்ற அனைத்து சுகாதார பணியாளர்களும் தங்கள் காலணிகளை அகற்றியபோது, ​​ரெஜினா அந்த இடத்தின் புனிதத்தை மதிக்க மறுத்து, தனது காலணிகளுடன் கருவறையின் முன் அமர்ந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இது கிராம மக்களை கோபத்தில் ஆழ்த்தியது. அதை அகற்றும்படி கிராமவாசிகள் அவளிடம் கேட்டபோது, ​​”கோவிலுக்குள் காலணி அணியக் கூடாது என்று ஒரு பலகை இருக்கிறதா?” என கேட்டுள்ளார்.

பலமுறை வேண்டுகோள் விடுத்தாலும், ரெஜின் தனது காலணிகளை அகற்ற மறுத்த நிலையில், ரெஜினா கோவிலை விட்டு வெளியேறாதவரை தடுப்பூசி எடுக்க போவதில்லை என கிராமவாசிகள் மறுத்தனர்.

இந்த விவகாரம், அப்பகுதியில் உள்ள இந்து முன்னணி தலைவர் ஆதி சிவாவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு வந்தார். இந்துக்களின் உணர்வுகளை மதிக்கவும், அவளுடைய காலணிகளை கழற்றவும் அவர் மருத்துவரிடம் கேட்டார், ஆனால் மருத்துவர் முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

நிலைமை மோசமடைவதைக் கண்ட டாக்டர் ரெஜினா, வெறுங்காலுடன் சென்றால், கொரோனா தொற்று ஏற்படும் என்று அஞ்சுவதாகக் கூறி தனது செயலுக்கான நியாயத்தை கூறினார்.

ஆனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக கோவில் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினர்.

கிராமவாசிகளின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக டாக்டருடன் வந்த செவிலியர்கள் மருத்துவர் சார்பாக மன்னிப்பு கேட்ட பிறகுதான் கிராம மக்கள் தடுப்பூசிகளை எடுக்க ஒப்புக்கொண்டனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img