வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!

robbery
robbery

பெண்ணாடம் அருகே வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணாடம் அடுத்த இறையூர், நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சித்ரா, 65; சீனிவாசன் கடந்தாண்டு இறந்து விட்டார். மகன் பரணியுடன் சித்ரா வாடகை வீட்டில் வசிக்கிறார்.

இறையூர், அண்ணாநகர் பகுதியில் சித்ரா புதிதாக கான்கிரீட் வீடு கட்டி வருகிறார். இதனால் அருகே தற்காலிக ஓட்டு வீட்டில் உபயோக பொருட்கள், பணம், நகை வைத்துள்ளார்,

நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, நடுத்தெருவில் உள்ள வீட்டிற்கு சென்றனர். மீண்டும் நேற்று காலை 9:00 மணியளவில் சித்ராவின் மகன் பரணி வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 10 ஆயிரம், ஒன்றரை சவரன் நகை திருடு போயிருந்தது. டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கடந்த வாரம் முருகன்குடியில் பைக் திருட்டு; 3 நாட்களுக்கு முன் பெரியகொசப்பள்ளம் ரைஸ் மில்லில் ரூ. 5,000, தளவாட பொருட்கள் திருடு போனது. பெண்ணாடம் பகுதியில் தொடர் திருட்டு நடப்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories