December 5, 2025, 4:43 PM
27.9 C
Chennai

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயிண்ட் விற்பனை!

paint
paint

வானகரம் பகுதியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி பெயின்ட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.

அதன்பேரில், கடந்த 25ம் தேதி வானகரம் செட்டியார் அகரம் முதல் தெருவில் உள்ள ஜெயம் ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ள கிருஷ்ணா வன்பொருளம் மற்றும் மின்பொருளகம் மற்றும் பள்ளிக்கூட தெரு, செட்டியார் அகரம் ஆகிய இடங்களில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

பிரபல பெயின்ட் நிறுவனம் பெயரில் 45 டப்பா பெயின்ட்கள், 11 போலியான சுவர் புட்டி பைகள், 250 காலி பப்பாக்கள், பிரபல பெயின்ட் நிறுவனத்தின் வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மாதவரம் – செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள மாஹாதேவ் இன்ட்ஸ்ட்ரீஸ் மற்றும் அதனை தொடர்ந்து எருக்கஞ்சேரி ராஜிவ்காந்தி நகர் 2வது தெருவில் இயங்கி வந்த போலி பெயின்ட் தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அங்கு, 19 போலி பெயின்ட் டப்பாக்கள், 24 காலி டப்பாக்கள், போலி வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக, மதுரவாயல் பகுதியை சேர்ந்த சரவணன் (41), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (26), எருக்கஞ்சேரி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த குமரேசன் (37), மாதவரம் சாந்தி காலனியில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சகாதேவ் (45) ஆகிய 4 பேரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories