சிறுவனை சிறுமி என்று பதிவிட்ட ஆனந்த் மஹிந்தரா! வைரலான பதிவுகள்!

neelakandan
neelakandan

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் இளம் திறமைகளை ஊக்குவிப்பதில் முன்னுரிமை கொடுப்பவர். அவரின் வலைதள பக்கங்களை பின்தொடர்பவர்களுக்கு இது தெரியும்.

இதற்கிடையே, இன்று ஆனந்த் மஹிந்திரா ஒரு சிறுவன் களரிபயட்டு பயிற்சி செய்யும் வீடியோவால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அந்த வீடியோவை பகிர்ந்துகொண்டார். கூடவே,

‘எச்சரிக்கை: இந்த இளம் பெண்ணின் வழியில் செல்லாதீர்கள்! நம் விளையாட்டு முன்னுரிமைகளில் களரிபயட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும். இது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்…” என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இவரின் பதிவுக்கு அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் பதில் கொடுத்தான். விரைவாகவே அந்த சிறுவனின் பதிவு ஆனந்த் மஹிந்த்ராவின் பதிவை விட வைரலாகச் சென்றது. காரணம் ஆனந்த் மஹிந்திரா தவறாக பதிவிட்டிருந்தது தான். அதாவது,

வீடியோவில் களரி விளையாடியது கேரளாவில் உள்ள ஏகவீர களரிபயட்டு அகாடமியின் மாணவரான நீலகண்டன் நாயர் என்ற சிறுவன். ஆனால், ஆனந்த் மஹிந்திரா சிறுவனின் நீள முடி உள்ளிட்டவற்றை வைத்து அவரை சிறுமி என்று அடையாளப்படுத்தி பதிவிட்டு இருந்தார்.
பின்னர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவுக்கு நீலகண்டன் பதிலளித்தார்.

‘உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சார். ஒரு சிறிய திருத்தம் – நான் ஒரு பெண் அல்ல, நான் 10 வயது சிறுவன். களரி குறித்த ஒரு குறும்படத்தில் நடிப்பதற்காக என் தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறேன்,” என்று பதில் கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு பதிவும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிலர் சிறுவனை பாராட்டி வரும் நிலையில், சிலர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் களரி குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். பண்டைய தற்காப்புக் கலை வடிவமான களரிபயட்டு கேரளாவில் உருவானது. களரி என்றும் அழைக்கப்படும் களரிபயட்டு, இந்தியாவிற்கு தனித்துவமான ஆயுதங்களான குண்டுகள், குச்சிகள் மற்றும் வாள்களுடன் பண்டைய போர்க்களத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

வீடியோவில், நீலகண்டன் நாயர் ஒரு நீண்ட குச்சியைப் பயன்படுத்தி சிரமமின்றி களரிபயட்டு பயிற்சி செய்கிறார். இவரின் பயிற்சி தொடர்பான நிறைய வீடியோக்கள் வலைதளங்களில் காண முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories