கணவரின் முதல் மனைவியின் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை!

veni
veni

குடியாத்தத்தில் குழந்தை இல்லாத விரக்தியில் கணவரின் முதல் மனைவியின் பிள்ளைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த சித்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் பெயின்டர் சேட்டு (35). இவரது மனைவி ஈஸ்வரி. 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

இதனால், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வேணி (29) என்பவரை சேட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சேட்டு தினசரி காலை 5.30 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவார். இதனால், ஈஸ்வரியின் பிள்ளைகளுக்கு சித்தி வேணி பாதுகாவலராக இருந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஒரு மாதமாக சேட்டுவின் முதல் மனைவியின் 8 வயதுடைய மகனை வேணி, அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு 8 வயது சிறுவனை வேணி சூடு வைத்து சித்ரவதைசெய்துள்ளார். இதை, அதே பகுதியில் உள்ள பெரியம்மா மரியா என்பவரிடம் சிறுவன் தெரிவித்து அழுதுள்ளார்.

சிறுவனுக்கு உடலில் பல இடங்களில் சூடு கொப்புளம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மரியா, குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்தார்.

அதன்பேரில், நகர காவல் ஆய்வாளர் லட்சுமி விரைந்து சென்று விசாரணை செய்தார். அதில், இரண்டு திருமணம் செய்தும் குழந்தை பிறக்காத விரக்தியில் இருந்த வேணி, 8 வயது சிறுவனை சூடு வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, வேணியை காவல் துறையினர் கைது செய்து, சிறுவனை அவரது பெரியம்மா மரியா பராமரிப்பில் இருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories