X பாய் ப்ரண்டு இந்நாள் காதலனுக்கு அனுப்பிய வீடியோ.. இருவரும் சேர்ந்து வலைதளத்தில் விட்டதால்.. பெண் அதிர்ச்சி!

Nelson siva
Nelson siva

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கல்லூரி மாணவியின் அந்தரங்க படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்ட முன்னாள் காதலன் மற்றும் இப்போதைய காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

காதலர் சதீஷ் திண்டுக்கல் ரெட்டை மலை பகுதியை சேர்ந்தவர். காதலிக்கும் போது அந்த கல்லூரி மாணவி தனது அந்தரங்க புகைப்படங்களை தனது காதலன் சதீஷுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்தக்காதல் முறிந்துள்ளது.

கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துள்ளனர். பின்னர் ஃபேஸ்புக் மூலம் நண்பரான அருண் என்பவருடன் அப்பெண்ணுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயம் முன்னால் காதலன் சதீஷுக்கு தெரியவர அவர், தன்னிடம் இருந்த காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இப்போதைய காதலன் அருணுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இருவரிடம் இருந்தும் அந்த புகைப்படங்கள் இவரின் நண்பர்களான மைக்கேல்பாளையம் நெல்சன், தூத்துக்குடி விஷ்வா ஆகியோருக்கும் சென்றுள்ளன.

செல்போனில் இருந்து கைமாறிய அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தன்னுடைய அந்தரங்க படம் சோஷியல் மீடியாவில் பரவுவதை கண்ட கல்லூரி மாணவி இது தொடர்பாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த திண்டுக்கல் சதீஷ், மைக்கேல்பாளையம் நெல்சன் தூத்துக்குடி அருண், விஷ்வா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் தொடர்புடைய சதீஷ், நெல்சன் ஆகியோரை கைது செய்த போலீசார் திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த அருண், விஷ்வா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்

இணையத்தில் பல மோசடிகளும், மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் செக்ஸ் வீடியோ மிரட்டல் எனப்படும் மோசடி அதிகரிப்பது குறிப்பிட்டுள்ள போலீசார் சில பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

தெரியாத எண்ணில் இருந்து வீடியோகால் வந்தால் தவிர்க்க வேண்டும்

இணையம் எதையுமே மன்னிக்கவோ, மறக்கவோ செய்யாது. நீங்கள் இணையத்தில் எந்த விதத்திலும் தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்கே எதிராக அமையலாம்

சோஷியல் மீடியாவில் நண்பர்கள் கிடைப்பது சாதாரண விஷயமே. ஆனால் அவர்களின் எல்லையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். யாராவது அதிக நெருக்கத்தை காட்டினால் உஷாரகிவிடுங்கள்

எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் இணையத்தில் அந்தரங்க வீடியோக்களை அனுப்புவதை தவிருங்கள். செல்போனில் அந்தரங்க வீடியோ , புகைப்படம் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது

எதாவது மர்மமான வித்தியாசமான மின்னஞ்சல் தேடி வந்தால் அதனை புறக்கணிக்க வேண்டும். தேவையில்லாத வெப்சைட்டுகளை தொடவேகூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories