மணல் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று முதல் இயங்கும்

sand-lorry நாமக்கல்: தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து மணல் லாரிகள் புதன்கிழமை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும். தமிழக அரசால் நடத்தப்படும் அனைத்து மணல் குவாரிகளிலும் 2 யூனிட்டுக்கு ரூ.1,000, 3 யூனிட்டுக்கு ரூ.1,500 வீதம் வங்கி வரைவோலை பெற்றுக் கொண்டு மணல் வழங்கக் கோரி திருச்சி மண்டலத்தில் மணல் லாரிகளை இயக்காமல் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, கடந்த 3 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. மேலும், நிர்ணயித்த அளவை விட அதிகமாக மணல் ஏற்றிச்சென்ற லாரிகளைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்நிலையில், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, 2-ஆம் மணல் விற்பனை மைய ஒப்பந்ததாரர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன்பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது… 2-ஆம் விற்பனை மையங்களில் சிறிய லாரிகளுக்கு 2 யூனிட், பெரிய லாரிகளுக்கு 3 யூனிட் மணல் மட்டுமே ஏற்றிவிடப்படும். ஓட்டுநர்கள் கேட்கும் ஊருக்கு மணல் எடுத்துச் செல்ல உரிமம் வழங்கப்படும் எனவும், இரண்டாம் விற்பனை மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் செயல்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்தனர். அதன்பேரில், போராட்டத்தை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மணல் லாரிகள் புதன்கிழமை காலை முதல் வழக்கம்போல் இயங்கும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories