இன்று (12.9.2021) தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு மழை
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட ஆரியூரில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தலா 10 கோழி முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
சேந்தமங்கலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தலா 5 கோழி முட்டைகள் வழங்கப்பட்டன.
வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கு கிராமத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திய பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் இன்று தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை ஊராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிளாஸ்டிக் குடம் பரிசாக வழங்கப்பட்டது.
இன்றைய மெகா தடுப்பூசி முகாம் 40000 இடங்களில் நடக்கிறது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாம் தவணையை தவற விட்டவர்கள் சென்று போட்டு கொள்ளுங்கள். உங்களுக்காக எளிதில் மக்காத ஒரு லட்சம் flex banner தலைவர் முகத்துடன் தொங்க விட்டு இருக்கிறார்கள். தடுப்பூசி மேளாவை சில மாதங்களுக்கு முன்னர் கேலி செய்து பதிவிட்டவர்கள் மெகா முகாம்களுக்கு அழைக்கிறார்கள். மாற்றத்தால் ஆகியது உலகம்.