தில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ரௌடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை!

delhi rohini court
delhi rohini court

தில்லி ரோஹிணி கோர்ட் வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரௌடி ஜிதேந்திர கோகி உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் காயம் அடைந்துள்ளனர். தில்லியில் தேடப்படும் குற்றவாளியான ஜிதேந்திர கோகியின் மீது, வக்கீல்கள் போல் உடையணிந்து வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லி ரோஹிணி கோர்ட் வளாகத்தில் இன்று காலை வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென கோர்ட் அறை எண் 206 இல் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்டிருந்த ஜிதேந்த்ர கோகியை சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதை அடுத்து, அங்கிருந்து பலரும் தலைதெறிக்க வெளியில் ஓடி வந்தனர். சம்பவம் குறித்து அறிந்த போலீஸார், உடனே அந்த இடத்துக்கு விரைந்தனர். பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ரௌடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர், ஜிதேந்திர கோகியை சுட்டுக் கொன்றவர்கள் மீது போலீசார் சுட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பெண் வக்கீல் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 35-40 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வக்கீல்கள் போல உடை அணிந்து வந்ததாகவும், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரௌடி ஜிதேந்தர் கோகி உள்பட நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜிதேந்திரா மற்றும் அவரது நண்பன் குல்தீப் ஃபஸ்ஸா இருவரும் தில்லி பல்கலையின் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் சிறப்பு குழுவினரால் இரு வருடங்கள் முன் குருக்ராமில் வைத்து கைது செய்யப் பட்டனர். அதன் பின்னர் போலீஸாரிடன் பிடியில் இருந்து மார்ச் 25ம் தேதி குல்தீப் தப்பியுள்ளான். இவர்களின் தொடர்பு வளையத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக சிறப்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோகி 2020இல் கைது செய்யப் பட்ட போது ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories