தவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு!

hair cut
hair cut

புது தில்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் தவறான முடித் திருத்தம் செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தேசிய நுகா்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆஷ்யானா ராய் தொடுத்துள்ள வழக்கின் விவரம்:
கடந்த 2018-இல் மாடல் தேர்வுக்கு முடி திருத்தம் செய்வதற்காக தில்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் உள்ள அழகு நிலையத்துக்குச் சென்று தனது நீண்ட கூந்தலை முடிவில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் வெட்டும்படி கூறினேன். ஆனால், எனது மொத்த முடியின் நீளத்தையே நான்கு அங்குலமாக்கி முடி திருத்துபவா் தவறாக வெட்டிவிட்டார்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடையின் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததால், தலைமுடி சிகிச்சையை இலவசமாகச் செய்தனர். ஆனால் அதில் எனது தலைமுடிக்கு நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டதுடன் அரிப்பு பாதிப்பும் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நான் பார்த்து வந்த வேலையும் பறிபோனது. எனது மாடலாகும் கனவு சிதைந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட முடி திருத்தகம் ரூ.3 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், ‘தனது முடியை அழகாக வைத்து கொள்வதற்காக அந்தப் பெண் பணத்தை செலவிட்டு விலை அதிகமான முடி திருத்தகத்துக்கு சென்றுள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

முடி அவரது உணா்வுபூா்வமான விவகாரமாக இருந்துள்ளது. அவரது நீண்ட கூந்தலுக்காகவே அவா் முடி பராமரிப்பு விளம்பரத்தில் நடிக்க மாடலிங் செய்துள்ளார். மன உளைச்சலால் அவா் தனது பணியையும் இழந்துள்ளார். முடி இழப்பு அவரது லட்சியத்துக்கும் வாழ்க்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவறான முடித் திருத்தம் செய்த காரணத்தால் அந்தக் கடை நிா்வாகம் இலவச முடி சிகிச்சை அளித்துள்ளது. ஆகையால், பாதிக்கப்பட்ட ஆஷ்யானா ராய்க்கு சம்பந்தப்பட்ட முடித் திருத்தகம் ரூ.2 கோடி இழப்பீட்டு தொகையை எட்டு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories