கூட்டமான பஸ்ஸில் ஏறி பேச்சுக் கொடுத்து.. நகை அபேஸ்! இரு பெண்கள் கைது!

chain
chain

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவர் திருவாடானை அருகேயுள்ள ஆர்.எஸ்.மங்களத்திலிருந்து தனது சொந்த ஊர் செல்வதற்காக பேருந்தில் ஏறி வந்துள்ளார்.

பஸ்ஸில் அமர்ந்து பயணம் செய்யும்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சிதா (27) மற்றும் மாரி (36) ஆகிய இருவரும் சரோஜா உடன் அறிமுகமாகி வெகுநாட்களாக பழகிய தோழிகள் போல சகஜமாக பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் மூவரும் நயினார்கோவில் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் இறங்கி சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற நிலையில் தற்செயலாக தனது கழுத்தை பார்த்துள்ளார் சரோஜா.

அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்க செயினை காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர் தன்னுடன் பேருந்தில் பயணம் செய்த அந்த இரு பெண்கள் மீது சந்தேகம் அடைந்து உள்ளார்.

mari
mari

சுதாரித்துக்கொண்ட அவர் பேருந்து நிலையத்தை சுற்றி அவர்களைத் தேடிப் பார்த்தபோது பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மளிகை ஸ்டோரில் பொருட்கள் வாங்குவது போல் நின்று கொண்டு இருந்துள்ளனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் சரோஜா. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 6 சவரன் தங்கச் செயின் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்து அவர்களிடமிருந்து 6 சவரன் தங்க செயினை மீட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பேருந்தில் ஏறும், இறங்கும் பயணிகளிடம் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடுவது விசாரணையில் தெரியவந்தது.

ranchitha
ranchitha

அவர்கள் இருவரும் கூட்டமாக இருக்கும் பேருந்தில் பயணம் செய்வார்களாம். அப்போது ஓரளவு நகை அணிந்த பெண்களின் அருகில் நின்று கொண்டோ அல்லது இருக்கையில் அமர்ந்து கொண்டோ பயணம் செய்வார்களாம்.

அப்போது அருகில் இருக்கும் பெண்களிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்து ரொம்ப நாட்களாக பழகியதுபோல பேசி நைசாக நெருங்கி அவர்களின் கவனத்தை திசை திருப்பி நகையை திருடுவது பழக்கமாம்.

அதிலும் ஒருவர் பேச்சு கொடுத்து அருகில் இருக்கும் பெண்ணின் கவனத்தைத் திசை திருப்பிவிடுவதும், மற்றொருவர் நகையை அபேஸ் செய்வதில் கவனமாக இருந்து கூட்டு திருட்டு செய்வார்களாம்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

சில நேரங்களில் பேருந்துக்குள் சில்லரைகளை சிதறவிட்டு அதை தேடுவதுபொல் நடித்து, பயணிகளின் கவனம் திசை திரும்பும்போது பயணிகள் வைத்திருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிடுவார்களாம்.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories