கூட்டமான பஸ்ஸில் ஏறி பேச்சுக் கொடுத்து.. நகை அபேஸ்! இரு பெண்கள் கைது!

chain
chain

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவர் திருவாடானை அருகேயுள்ள ஆர்.எஸ்.மங்களத்திலிருந்து தனது சொந்த ஊர் செல்வதற்காக பேருந்தில் ஏறி வந்துள்ளார்.

பஸ்ஸில் அமர்ந்து பயணம் செய்யும்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சிதா (27) மற்றும் மாரி (36) ஆகிய இருவரும் சரோஜா உடன் அறிமுகமாகி வெகுநாட்களாக பழகிய தோழிகள் போல சகஜமாக பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் மூவரும் நயினார்கோவில் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் இறங்கி சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற நிலையில் தற்செயலாக தனது கழுத்தை பார்த்துள்ளார் சரோஜா.

அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்க செயினை காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர் தன்னுடன் பேருந்தில் பயணம் செய்த அந்த இரு பெண்கள் மீது சந்தேகம் அடைந்து உள்ளார்.

mari
mari

சுதாரித்துக்கொண்ட அவர் பேருந்து நிலையத்தை சுற்றி அவர்களைத் தேடிப் பார்த்தபோது பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மளிகை ஸ்டோரில் பொருட்கள் வாங்குவது போல் நின்று கொண்டு இருந்துள்ளனர்.

ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் சரோஜா. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 6 சவரன் தங்கச் செயின் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்து அவர்களிடமிருந்து 6 சவரன் தங்க செயினை மீட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பேருந்தில் ஏறும், இறங்கும் பயணிகளிடம் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடுவது விசாரணையில் தெரியவந்தது.

ranchitha
ranchitha

அவர்கள் இருவரும் கூட்டமாக இருக்கும் பேருந்தில் பயணம் செய்வார்களாம். அப்போது ஓரளவு நகை அணிந்த பெண்களின் அருகில் நின்று கொண்டோ அல்லது இருக்கையில் அமர்ந்து கொண்டோ பயணம் செய்வார்களாம்.

அப்போது அருகில் இருக்கும் பெண்களிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்து ரொம்ப நாட்களாக பழகியதுபோல பேசி நைசாக நெருங்கி அவர்களின் கவனத்தை திசை திருப்பி நகையை திருடுவது பழக்கமாம்.

அதிலும் ஒருவர் பேச்சு கொடுத்து அருகில் இருக்கும் பெண்ணின் கவனத்தைத் திசை திருப்பிவிடுவதும், மற்றொருவர் நகையை அபேஸ் செய்வதில் கவனமாக இருந்து கூட்டு திருட்டு செய்வார்களாம்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

சில நேரங்களில் பேருந்துக்குள் சில்லரைகளை சிதறவிட்டு அதை தேடுவதுபொல் நடித்து, பயணிகளின் கவனம் திசை திரும்பும்போது பயணிகள் வைத்திருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிடுவார்களாம்.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories