December 8, 2025, 2:11 PM
28.2 C
Chennai

சைட் அடிக்கிறதுல தகராறு: மோதிய மாணவர்கள், இளைஞர்கள்! 30 பேர் மீது வழக்கு!

melur bus stand
melur bus stand

மேலூர் பேருந்து நிலையத்தில் மாணவர்கள், இளைஞர்கள் இடையே மோதல்: 30 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து, சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மேலூர், பகுதிக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தங்களுடைய கல்வி, வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மேலூரில் இருந்து நாவினிப்பட்டி வழியாக செல்லக் கூடிய அரசு டவுன் பேருந்தில் செல்வது தொடர்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பேருந்து நிலையத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்ட மோதலாக மாறியது.

இதில் ஒருவரை, ஒருவர் விரட்டி, விரட்டி தாக்கிக்கொண்டனர். இதனால், பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களும், மாணவ,மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து, தகவலறிந்து, அப்பகுதியில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் வந்த நிலையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தப்பியோடிய நிலையில், இந்த மோதல் தொடர்பாக கல்லூரி படிப்பு முடித்த மேலூர் நாவினிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை கைது செய்யப் பட்டார்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், மற்றவர்களை அடையாளம் கண்டு 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலூர் பேருந்து நிலையத்தில், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என ஏராளமான பெண்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களை பார்ப்பது தொடர்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது!

இந் நிலையில், மேலூர் பேருந்து நிலையம், அதன் அருகேயுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியினை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories