காகமாக வந்த இறந்த தந்தை! விருந்தளித்து உபசரிக்கும் குடும்பம்!

crow 2
crow 2

இறந்துபோன தந்தை காகம் வடிவில் தங்களின் வீட்டுக்கு வந்திருப்பதாக நினைத்து ஒரு குடும்பத்தார் காகத்திற்கு விதவிதமான உணவை வைத்து பார்த்துக்கொள்ளும் சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு வயது 60. விவசாயியான இவர், ஜோசியமும் ஜாதகமும் பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பாண்டியன் கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்து விட்டு, வீட்டில் அவரின் புகைப்படத்தை வைத்து குடும்பத்தினர் வழிபட்டு வந்தனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, காகம் ஒன்று பாண்டியன் வீட்டையே சுற்றி சுற்றி வந்துள்ளது. இதனைக்கண்ட அவரது குடும்பத்தார் காகத்தை விரட்டியடித்துள்ளனர்.

ஆனால், காகம் எந்தவித அச்சமும் இல்லாமல் வீட்டின் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பாண்டியனின் புகைப்படம் முன்பாக வந்து அமர்ந்து கொண்டது.

crow
crow

இதைக்கண்ட குடும்பத்தினர் இறந்துபோன தங்கள் தந்தையே காகம் வடிவில் வீட்டுக்கு வந்ததாக நம்ப தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, காகத்துக்கு தேவையான உணவு, நீரை வழங்கி வணங்கி வருகின்றனர்.

இறந்துபோன தனது தந்தை காகம் வடிவில் வந்துள்ளார் என்றும், தந்தை அமரும் இடம் மற்றும் படுக்கை அறைக்கு அந்த காகம் செல்கிறது என்றும், தங்களுக்கு சொந்தமான வயலில் தந்தை வடிவில் உள்ள காகம் வந்து அமர்ந்து கொள்கிறது. இதுவெல்லாம் எப்படி ஒரு காகத்திற்கு தெரியும். எனவேதான், தங்களின் தந்தை காகம் வடிவில் வந்துள்ளதாக பாண்டியனின் மகன் வினோத் உருக்கமாக கூறினார்.

வினோத் மேலும் கூறுகையில், “எங்கள் தந்தை வீட்டில் எங்கெல்லாம் செல்கிறாரோ. அங்கு எல்லாம் காகம் செல்லும். அப்போதுதான் நினைத்தோம் காகம் ரூபத்தில் தந்தை வந்துள்ளார் என்று.

இப்பவும் அவர் எங்களை விட்டு போகவில்லை இங்குதான் இருக்கிறார்” என்று கூறினார். இந்த நிகழ்வை அந்தப்பகுதி மக்கள் ஆச்சயர்த்துடன் பார்க்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories