ஆந்திரா சிறுமி.. காப்பகத்தில் இருந்து காணாமல் போன மர்மம்!

geetha
geetha

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில், கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி, தமிழ் பேசத்தெரியாத 14 வயது சிறுமி ஒருவர் தெலுங்கு மொழியில் பேசி, தனியாக நின்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், அச்சிறுமி குறித்து, தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, தெலுங்கு மொழி பேசும் பெண்ணை மீட்டு, அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அச்சிறுமி, தான் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர், தனது பெயர் கீதா என்று தெலுங்கு மொழியில் கூறினார். இதனையடுத்து போலீசார், சிறுமியாக இருப்பதால், தஞ்சாவூரில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக கீதா, இல்லத்தில் தங்கியிருந்தார். இல்ல அதிகாரிகள், சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 30ஆம் தேதி இல்லத்தில் உள்ள அனைவரும் படுத்துறங்கினர். அவர்களுக்கு பாதுகாப்பாக விடுதி செவிலியர் மாலதி மற்றும் உதவியாளர் சுமதி ஆகியோர் படுத்திருந்தனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

அதன் பின்னர் அதிகாலை 4.30 மணியளவில், விடுதி செவிலியர் மாலதி எழுந்து பார்வையிட்டபோது, சிறுமி கீதா படுத்திருந்த இடத்தில் காணவில்லை. அதனை தொடர்ந்து அனைத்து மாணவிகளையும் எழுப்பி கேட்ட போது தெரியவில்லை என்று பதிலளித்தனர்.

உடனே, விடுதி செவிலியர் மாலதி, உதவியாளர் சுமதி மற்றும் மாணவிகள் அப்பகுதி முழுவதும் தேடினார்கள். எந்த இடத்திலும் கீதாவை காணவில்லை. பின்னர், இல்லத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் சிறுமி கீதா, நள்ளிரவு 12.30 மணியளவில் படுக்கையை விட்டு, எழுந்து, மாடிப்படி வழியாக தரை தளத்திற்கு வந்தார். அதன் பிறகு சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை. இதனால் கீதா எங்கு சென்றிருப்பார் என மீண்டும் அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

சிறுமி கீதா, சிசிடிவி கேமாவில் பதிவாக கூடாது என்பதற்காக முதல் தளத்திலிருந்து, கீழே குதித்து தப்பித்திருக்கலாம் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இது குறித்து அலுவலர் கூறுகையில், சிறுமி கீதாவை, சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.

அவருக்கு தமிழ் பேசத்தெரியாததால், தெலுங்கு மொழியை மட்டும் பேசி வந்தார். இந்நிலையில் திடீரென, இல்லத்திலிருந்து காணாமல். முதல் தளம் வரை தான் சிசிடிவி பதிவாகியுள்ளது. அதன் பிறகு எங்கு சென்றார் என தெரியவில்லை.

சிறுமி கீதா, சுமார் 12 அடிஉயரத்திலிருந்து, வடக்கு புறத்திலுள்ள சுவருக்கு வெளியே குதித்து, ரயில்வே டிராக் வழியாகவோ அல்லது மாடிக்கும்,தரைக்கும் இடையில் 6 அடிஉயர தகர கொட்டகை உள்ளது. அதன் மீது குதித்து தப்பிசென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories