December 6, 2025, 6:57 AM
23.8 C
Chennai

கும்பி எரியுது குடல் கருகுது… உங்களுக்கு ஊட்டி குளுகுளு வாசம் ஒரு கேடா!

adani ambani
adani ambani

உண்மைகளின் உண்மை
~ ஆர். நடராஜன்
~

புள்ளி விவரங்கள் முழுப் பைகள் அல்லது அரைப்பைகள் என்பதுதான் உண்மை. அப்படியிருக்க எதற்காக எப்படி எடுக்கப்பட்ட புள்ளி விவரம் என்பதை புரிந்துகொள்ளாதவர்கள் அதைப் பெரிதுபடுத்தி மக்களிடம் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். பொய் என்று தெரிந்தும் அதை அரசியலுக்காக பயன்படுத்தும் நபர்களும் உண்டு.

அப்படித்தான் இப்போது ஒரு பிரச்சாரம் நடந்துவருகிறது. அதான் தொழிலதிபர் அதானி தினமும் 1000 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்… அவரது சொத்து மதிப்பு 5லட்சம் கோடிக்கும் மேல். முகேஷ் அம்பானியின் சொத்தும் லட்சக்கணக்கான கோடிகளில்.
பங்கு சந்தை பற்றி விவரம் தெரியாத பாமர மக்கள் அய்யய்யோ இவர்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதா என்று அதிர்ந்து போவார்கள்.

அப்படி அதிர்ந்து போகச் செய்யத்தான் புள்ளிவிவரங்கள் தவறான முறையில் எடுத்துக் காட்டப் படுகின்றன. தனி மனிதர் பெயரில் அவரது சொந்தக் கணக்கில் இருக்கும் பணத்தை வைத்தே ஒருவரை பணக்காரர் என்பதை சொல்லமுடியும்.

அவர் நடத்தும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு, பங்குதாரர்களின் முதலீடு அது அவருக்கு முழுவதும் பாத்தியப்பட்ட சொத்து அல்ல. பங்குகளின் மதிப்பு கூடும்; குறையும், ஒரேயடியாக சரியும். இது தெரிந்தும் மக்களை குழப்புவதற்கென்றே சில விவாதங்கள் நடைபெறுகின்றன.

அந்தக் காலத்தில் டாட்டா, பிர்லா என்றார்கள். இந்தக் காலத்தில் அம்பானி, அதானி என்கிறார்கள். இந்த தொழிலதிபர்களின் தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதற்கு விலை கொடுக்கிறார்கள்.

அந்த வருமானத்தில் நடைபெறும் நிறுவனங்களில் பங்குகளை பங்கு முதலீட்டார்கள் வாங்குகிறார்கள் லாபத்தில் பங்கு பெறுவதற்காக! இந்தப் பொருளாதாரச் சுழல், சூழல் புரியாத பாமர ஜனங்களை அரசியல்வாதிகளும், அரசியல் சார்ந்த ஊடகங்களும் மிக நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றன.

இது மிகவும் பாடுபட்டு சம்பாதித்த செல்வந்தர்கள் மீதும் ஒரு வெறுப்பு உணர்வு தோன்ற காரணமாகும். இந்த நிலை தொடர்வது நாட்டின் தொழில் வர்த்தகத் துறைக்கும், வியாபார நுகர்வுக்கும், சமூக நலனுக்கும் உகந்தது அல்ல.

மக்களுக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதற்காக நம் நாட்டில் அரசியல் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மைகளில் பெரிய உண்மை.

‘கும்பி எரியுது குடல் கருகுது உங்களுக்கு ஊட்டி குளுகுளு வாசம் ஒரு கேடா’ என்று கேட்டவர்கள் இன்று குளுகுளு வாசத்தில் தான் இருக்கிறார்கள்… குடிசையில் இல்லை. அவர்களால் ஆளப்படுபவர்களால் தான் கும்பி எரியுது குடல் கருகுது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories