உல்லாச கப்பலில் போதைப் பார்ட்டி! சாருக் மகனிடம் விசாரணை!

ship
ship

உல்லாச கப்பல் ஒன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பலில் போதை பார்ட்டி நடந்ததாகவும் அதில் ஷாருக்கான் மகன் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்ட நிலையில் ஷாருக்கான் மகனிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தில்லியை சேர்ந்த நிறுவனமொன்று ஃபேஷன் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து க்ரே ஆர்க் என்ற பெயரில் பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்திருந்தது.

மும்பையிலிருந்து எம்பிரஸ் என்ற சொகுசு உல்லாச கப்பல் நேற்று பிரபலங்களுடன் பயணம் செய்தது. இந்த கப்பல் நடுக்கடலில் பயணம் செய்யும் போது திடீரென போதை பார்ட்டி நடந்ததாகவும் அதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

sharuk Khan ariyankhan
sharuk Khan ariyankhan

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனி படகு ஒன்றில் எம்பிரஸ் கப்பலை நெருங்கி அதில் சோதனை செய்தனர்.

அப்போது கோகைன் உள்பட தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை ஒரு சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

சினிமா மற்றும் தொழிலதிபர்களின் வாரிசுகள் அந்த போதை பொருள் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்பட்டதை அடுத்து அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் போதைப்பொருள் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் ஆரியன் என்று கூறப்படுவது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் ஷாருக்கான் மகனை கைது செய்யவில்லை என்றும் அவர் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி விவகாரத்தில் 8 பேரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடுகடலில் உல்லாசக் கப்பலில் பிரபலங்களின் வாரிசுகள் போதை பார்ட்டி நடத்திய விவகாரம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories