ஆப்பிள் ஐஃபோன் 12- ஐ ஆர்டர் பண்ணினவருக்கு வந்ததோ நிர்மா வாஷிங் பௌடர்!

parsal
parsal

வாஷிங் பவுடர் நிர்மா.. நிர்மா.. எனும் விளம்பரப் பாடலைக் கேட்டால் இப்போதும் நம்மில் பலருக்கும் இளமைக்கால நினைவுகள் கண் முன்னே வந்துபோகும். ஆனால், இந்த ‘நிர்மா’ ஒருவரின் வாழ்க்கையில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகை காலங்களை முன்னிட்டு பல நிறுவனங்களும் தங்களது பொருட்களை ‘சிறப்புத் தள்ளுபடியில்’ விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது. இந்த விழாக்கால சிறப்புத் தள்ளுபடிக்கு ‘ஃப்ளிப்கார்ட்’, ‘அமேசான்’, போன்ற பெருநிறுவனங்களும் விதிவிலக்கல்ல.

தீபாவளியை முன்னிட்டு மிகக் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக, பல நூறு விளம்பரங்கள் நமது நோட்டிஃபிகேஷனை நிரப்புகின்றன. அந்தவகையில், ப்ளிப்கார்ட் நிறுவனம், ‘பிக் பில்லியன் சேல்ஸ்’ எனும் ஆஃபரின் கீழ் பிராண்டட் பொருட்களை, குறைந்த விலையில், குறுகிய காலத்திற்குள் விற்பனை செய்து வந்தது.

nirma
nirma

இதைப் பார்த்ததும், குறைந்த விலையில் ஆப்பிள் ஐஃபோன் வாங்க நினைத்துள்ளார் வாடிக்கையாளரான சிம்ரன்பால் சிங். ஆப்பிள் ஐஃபோன் 12-ஐ, ரூபாய் 51,999-க்கு ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார் சிம்ரன்பால்.

கடந்த அக்டோபர் 4-ம் தேதி, ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ஐஃபோன் வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் ஊழியர் அவரை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அப்போது, ‘ஓபன் பாக்ஸ் டெலிவரி’ முறையின் கீழ், ஃப்ளிப்கார்ட் ஊழியர் முன்னிலையிலேயே திறந்துள்ளார்.

அத்துடன், அதை வீடியோவாகப் பதிவும் செய்துள்ளார். ஐஃபோன் கனவுடன் பாக்சை திறந்து பார்த்தபோது, ஐந்து ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிர்மா சோப்புகள் இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிம்ரன்பால், ஃப்ளிப்கார்ட் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், ஊழியரோ, உங்கள் OTP சொல்லுங்க எனக் கூறியுள்ளார்.

இதனால், மேலும் கடுப்பான சிம்ரன்பால், ‘ஐஃபோன் ஆர்டர் பண்ண எனக்கு சோப்புக் கட்டி வந்துருக்குனு சொல்றேன் நீங்க OTP கேட்டுட்டு இருக்கீங்க’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஆனாலும், அந்த ஊழியர் OTP எண்ணை வாங்கிவிடுவதிலேயே குறியாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிம்ரன்பால், உடனே ஃபிளிப்கார்ட் கஸ்டமர் கேர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கியுள்ளார்.

ஃபிளிப்கார்ட் தரப்பில் கவலைப்படத் தேவையில்லை, உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் உங்களது ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, உங்களது பணம் உங்கள் பேங்க் அக்கவுண்டுக்கே வந்துவிடும் எனக் கூறியுள்ளனர்.

ஆனாலும், தொடர் அலைக்கழிப்புக்குப் பிறகு, சுமார் 5 நாட்கள் கழித்தே பணம் சிம்ரன்பாலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிம்ரன்பால் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஆர்டர் செய்யும் அனைவரும் ‘ஓபன் பாக்ஸ் டெலிவரி’ முறையைப் பயன்படுத்துங்கள். என்னைப் போலவே எல்லாருக்கும் போன பணம் திரும்ப கிடைத்துவிடாது. ஆகையால் விழிப்புணர்வுடன் ஆர்டர் செய்யுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே பல தளங்களில் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், ஃப்ளிப்கார்ட் போன்ற ஒரு நம்பிக்கையான பெரிய நிறுவனத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பலரது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories