ஏடிஎம் மூலம் இனி பணம் திருட முடியாது! எஸ்பிஐ புது திட்டம்!

atm 1 1
atm 1 1

ஏடிஎம் கார்ட் தொலைந்துவிட்டால்,உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்புகொண்டு, கார்டை செயலிழக்கச் செய்வோம்.

சில சமயங்களில் கார்ட் தொலைந்தது குறித்து புகார் அளிப்பதற்குள், அதிலிருந்து ஆயிரக்கணக்கில் திருடு போன சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.

தொழில்நுட்ப ரீதியாகப் பணத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளும் நிலையில், ஏடிஎம்மில் திருடும் போவதைத் தடுத்திட ஓடிபி திட்டத்தை எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ளது.

எஸ்பிஐ வங்கி, கடந்த 01 ஜனவரி 2020 முதல் ஏடிஎம்மில் ஓடிபி வசதியைக் கொண்டு வந்துள்ளது. அப்போது, இரவு 8 மணி வரை காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது ஓடிபி வசதியைப் பயன்படுத்தித் தான் பணம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

sbi
sbi

இந்த திட்டத்தின் மூலம், பணம் திருட்டு முற்றிலும் தடுக்கப்படும் என்பதால் 24 மணி நேரமும் இந்த வசதியை எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது.

அதன்படி, இனி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-இல் ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுப்பவர்கள், பதிவு செய்த மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணையும் பதிவிட வேண்டும்.

ஓடிபி அடிப்படையிலான ஏடிஎம் செயல்படும் முறை

பணம் எடுக்கையில், கார்டை செலுத்தியதும், பின் நம்பரை பதிவிட வேண்டும்.

அடுத்ததாக, எடுக்க விரும்பும் பணத்தை குறிப்பிட வேண்டும்.

உடனடியாக வங்கி கணக்குடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு, ஓடிபி நம்பர் வரும்.

அந்த ஓடிபி நம்பரை, ஏடிஎம் திரையில் ஓடிபியை பதிவிட சொல்லும் இடத்தில் சரியாக பதிவிட்டால் மட்டுமே, பணத்தை எடுத்திட முடியும்.

இதன் மூலம், ஏடிஎம் மையத்தில் நடைபெறும் மோசடியை தடுத்திட முடியும் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு, 22 ஆயிரத்து 224 கிளைகள் உள்ளன. சுமார் 63 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories