சென்னை:
சென்னையில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீதான குண்டு வீச்சு தாக்குதல் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர். இந்தச் சப்மவம் குறித்து கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில், திமுக எம்.பி. கனிமொழி பேசினார். இதையடுத்து, இந்தத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.


