சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கோயிலில் கொள்ளை! பண்ருட்டியில் பெரும் பரபரப்பு!

kovil undilal
kovil undilal

கும்பாபிஷேகம் நடந்தது 20 நாட்களே ஆன அய்யனார் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அருகே வீரசிங்கன் குப்பத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக அப்பகுதியைச் சேர்ந்த அய்யாகண்ணு என்பவர் இருந்து வந்துள்ளார்.

இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கோவிலில் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலை கோவிலைத் திறந்த அய்யாக்கண்ணுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவிலில் கிரில் கம்பிகளுக்கு நடுவில் கட்டியிருந்த உண்டியலை மர்ம நபர்கள் வெளியில் இருந்து உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் பலர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து கோவில் தர்மகர்த்தா அய்யாகண்ணு முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா, முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்கு பதிந்து தடயங்களை சேகரித்தனர்.

கோவில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்து அவர்களிடமிருந்து கோவில் பணத்தை மீட்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories