மருதமலையில் சூரசம்ஹாரம்: மலையடிவாரத்தில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு!

கோவை மாவட்டம் மருமதலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி நேற்று எளிமையாக நடைபெற்றது.

கோவை அருகே உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது.

இதனையொட்டி, மருதமலை கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது, இளநீர் உள்ளிட்ட16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுற்றது. தொடர்ந்து, முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர், சண்முகார்ச்சனை நடைபெற்றது.

இதனை அடுத்து, மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாத நிலையில், கோயில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். எனினும் சூரசம்ஹார நிகழ்ச்சியை ஒட்டி வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரத்தில் விளக்கேற்றி முருக பெருமானை வழிபட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து, இன்று காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி -தெய்வானை திருக்கல்யாணம் வைபவம், திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories