அய்யனார் கோவில் திருக் கார்த்திகை தரிசனத்துக்கு தடை!

ayyanar koil rajapalayam
ayyanar koil rajapalayam

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து ராஜபாளையத்தில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு ஆற்றில் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப் பட்டதால் ,மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் பக்தர்களின்றி வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோயில் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மறு கரையில் புகழ்பெற்ற நீர்காத்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினத்தில் இக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

கார்த்திகை அன்று கோயிலுக்கு ராஜபாளையம் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல ஊர்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். ஆற்றில் புனித நீராடிய பின்னர், மறு கரையில் உள்ள அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், முடி எடுப்பது, குழந்தைகளுக்கு காதுகுத்துவது போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துவர்.

இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆற்றில் பக்தர்கள் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப் பட்டது.

எனவே நகரில் இருந்து சுமார் 4 கிமீ தூரத்திலேயே தற்காலிக காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மீறி வருபவர்களை தடுக்க மலை அடிவாரத்தில் வனத்துறையினரும், காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அய்யனார் கோயில் பகுதி முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்ச்சோடி காணப்பட்டது.

இதேபோல், கொரோனா தொற்று பரவல் தடை காரணமாக சஞ்சீவி மலையில் உள்ள அருள்மிகு குமாரசாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்யவும் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories