மகளை விட உரிமையானவள் மருமகளே..! உயர்நீதிமன்ற தீர்ப்பு!

court
court

சார்பதிவாளர் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தில் புதிய முறையை உருவாக்கி, மருமகளை குடும்பப் பிரிவில் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனுடன், 2019 ஆகஸ்ட் 5, தேதியிட்ட உத்தரவில் மாற்றங்களைச் செய்யவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடும்பத்தில் மகளை விட மருமகளுக்கு அதிக உரிமை உண்டு என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கடை நடத்த உரிமம் பெற்றவர் இறந்ததால் வாரிசுகளுக்கு ரேஷன் கடையை ஒதுக்கிய வழக்கில் மகனின் மனைவியான மருமகளை குடும்பத்தில் சேர்க்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மருமகளின் உரிமை
உத்தரபிரதேச அத்தியாவசிய பொருட்கள் ஆணை 2016 இல், மருமகள் குடும்ப பிரிவில் வைக்கப்படவில்லை, இதன் அடிப்படையில், மாநில அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி (High Court Verdict), உரிமம் பெற்றவர் இறந்த பிறகு, மருமகளுக்கும் அந்த உரிமத்தை பெறுவதற்கான உரிமை, மகளுக்கு இருப்பதைப் போலவே இருக்கிறது. இது பாலின சமத்துவம் தொடர்பான விஷயத்தில் மிகவும் முக்கியத் தீர்ப்பாக கருதப்படுகிறது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதியன்று, உத்தரப்பிரதேச மாநில உணவு மற்றும் வழங்கல் செயலாளர் பிறப்பித்த உத்தரவில் மருமகளுக்கு ரேஷன் கடையை பெற உரிமை இல்லை என்று தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் மருமகளுக்கு ரேஷன் கடை உரிமம் வழங்க மாவட்ட வழங்கல் அலுவலர் 2021 ஜூன் 17ம் தேதியன்று மறுத்துவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மருமகள் புஷ்பாதேவி மனு தாக்கல் செய்திருந்தார். புஷ்பா தேவியின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி நீரஜ் திவாரி இந்த முக்கிய தீர்ப்பை அளித்துள்ளார்.

மனுதாரருக்கு ரேஷன் கடை உரிமத்தை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

மனுதாரரின் மாமியாரின் பெயரில் ரேஷன் கடை நடத்துவதற்கான உரிமம் இருந்தது. மாமியார் 2021 ஏப்ரல் 11ம் தேதியன்று இறந்தார்.

ரேஷன் கடை உரிமம் வைத்திருந்தவரின் மகன் ஏற்கனவே இறந்தவிட்ட நிலையில், அந்த உரிமத்தை தனக்கு வழங்கக் கோரிய புஷ்பாவின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்தது.

கைம்பெண்ணான மருமகள் புஷ்பா மற்றும் அவரது இரண்டு மைனர் குழந்தைகளைத் தவிர, மனுதாரரின் குடும்பத்தில் வேறு வாரிசு யாரும் இல்லை என்பதன் அடிப்படையில் தனக்குக் உரிமத்தை வழங்க வேண்டும் என்று மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories