என்னாது… கிறிஸ்மசுக்கு லீவு வுடாம இருப்பாய்ங்களா..?! விட்டாச்சு லீவு!

school leave - 2026
Pic for Representation | from Facebook share
  • தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிச.25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை
  • பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நெல்லையில் பேட்டி
  • மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை
  • பள்ளி இடைவேளையின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தடுக்கவும் நடவடிக்கை – அமைச்சர்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிச.25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்தில் மூன்று நாட்களுக்கு சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு கிறிஸ்துமஸ் நிகழ்வை ஒட்டி அரசு சார்பில் விடப்படும் விடுமுறை இந்த முறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. காரணம் சனிக்கிழமை கூட விடுமுறை விட வாய்ப்பில்லை என்று குறுகிய காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருந்தனர். எனவே ஆசிரியர்கள் பலர், இந்த முறை பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கால விடுமுறை விட மாட்டார்கள் என்று கூறிக் கொண்டிருந்தனர்…

ஆனால் கிறிஸ்துமசுக்காவது… விடுமுறை விடாமல் இருப்பதாவது..?! இந்த அரசே கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சையில் வந்த விடியல் அரசு ஆயிற்றே… என்று சமூக தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. அதன்படி இன்று கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் சிறுபான்மை கோட்டாவில் அரசு உதவி பெறும் கிறிஸ்துவ நிர்வாகத்தில் இயங்கும் சாப்டர் பள்ளிக் கட்டடம் இடிந்து, மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த பள்ளியை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது… நாளை மறுநாள் (டிச.25) முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மதிய இடைவேளையின்போது மாணவர்கள் அனைவரும் வெளியே ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories