என்னாது… கிறிஸ்மசுக்கு லீவு வுடாம இருப்பாய்ங்களா..?! விட்டாச்சு லீவு!

school leave - 2026
Pic for Representation | from Facebook share
  • தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிச.25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை
  • பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நெல்லையில் பேட்டி
  • மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை
  • பள்ளி இடைவேளையின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தடுக்கவும் நடவடிக்கை – அமைச்சர்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிச.25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்தில் மூன்று நாட்களுக்கு சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு கிறிஸ்துமஸ் நிகழ்வை ஒட்டி அரசு சார்பில் விடப்படும் விடுமுறை இந்த முறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. காரணம் சனிக்கிழமை கூட விடுமுறை விட வாய்ப்பில்லை என்று குறுகிய காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருந்தனர். எனவே ஆசிரியர்கள் பலர், இந்த முறை பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கால விடுமுறை விட மாட்டார்கள் என்று கூறிக் கொண்டிருந்தனர்…

ஆனால் கிறிஸ்துமசுக்காவது… விடுமுறை விடாமல் இருப்பதாவது..?! இந்த அரசே கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சையில் வந்த விடியல் அரசு ஆயிற்றே… என்று சமூக தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. அதன்படி இன்று கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் சிறுபான்மை கோட்டாவில் அரசு உதவி பெறும் கிறிஸ்துவ நிர்வாகத்தில் இயங்கும் சாப்டர் பள்ளிக் கட்டடம் இடிந்து, மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த பள்ளியை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது… நாளை மறுநாள் (டிச.25) முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மதிய இடைவேளையின்போது மாணவர்கள் அனைவரும் வெளியே ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories