இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இணையத்தில் வைரலாகும் விலங்குகள் குறித்த வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவ்விதம் தற்போது வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தாகத்தால் தவித்து வாடிய முள்ளம்பன்றிக்கு பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் ஒருவர் தண்ணீர் அளிக்கின்றார். மிகவும் வறட்சியான நிலத்தில் குச்சியை பிடித்த படி தாகத்தை முள்ளம்பன்றி தணித்துக் கொண்டது.
ஒருவர் உயிர்வாழ சில துளிகள் தண்ணீர் மட்டுமே தேவை. அதை வழங்க ஒருவராக இருங்கள் என இந்திய வனத்துறை அதிகாரி இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/susantananda3/status/1479330705624629250?ref_src=twsrc%5Etfw