கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல அச்சப்படும் இந்த காலகட்டத்தில் இன்றியமையாத சில தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
அவற்றில் முக்கியமான ஒன்று வங்கிச்சேவை. தற்போது அதையும் வீட்டிலிருந்தே செய்துகொள்ளலாம் என கூறியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி. வாடிக்கையாளர்கள் 1800 1234 என்ற டோல் பிரீ என்னை அழைத்தால் போதும் வங்கி சேவைகளை மிக எளிமையாக பெறலாம்.
இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி தனது ட்விட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலமாகவும் கடைசி ஐந்து பணி பணபரிவர்த்தனை மற்றும் பேலன்ஸ் குறித்து செக் செய்து கொள்ளலாம்.
மேலும் ஏடிஎம் கார்டு பிளாக், புதிய ஏடிஎம் கார்டு அப்ளை செய்தல் போன்றவற்றையும் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாம்.
மேலும் பணம் அனுப்புவது பெறுவது போன்ற சேவைகளுக்கு மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.