சென்னை: சுவரொட்டி விவகாரத்தில் கோவை காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் அறிக்கை: கோவை எஸ்டிபிஐ கட்சி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தில் வீசிய டிபன் பட்டாசை இந்து முன்னணியோடு சம்பந்தப்படுத்தி போஸ்டர் போட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை இந்து முன்னணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் அவர்கள் இந்த சம்பவத்திற்கும், சென்ற ஞாயிறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பத்திரிகையில் விளக்கம் கொடுத்துள்ளார். இப்படி அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை காவல்துறை எடுக்க வேண்டும்.. இவர்களது அவதூறு போஸ்டர் பேஸ் புக்கிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.. ஈரோட்டில் ஒட்டாத போஸ்டருக்கு, எந்த முகாந்திரமும் இல்லாத விஷயத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் அழுத்தம் கொடுத்தது என்பதை காரணம் காட்டி காவல்துறை இந்து முன்னணி ஊழியரை கைது செய்து சிறையில் அடைத்தது.. ஆனால் இங்கோ கோவை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உண்மைக்கு புறம்பாக போஸ்டர் போட்டு மதக்கலவரத்தை தூண்டும் எஸ்டிபிஐ மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? பாரபட்சமான முறையில் காவல்துறை நடந்து கொள்ளுமேயானால்.. காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும்.. காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால்.. தமிழக முதல்வர் அவர்கள் தனக்குக் கீழ் வைத்துள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=wxYyUCdEmsU இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்…. நாய்க்கு கூட உங்கள் அமைப்பினர் தாலி கட்டுகிறார்களே.. அதனால் அதன் புனிதத்தை கேவலப்படுத்த வில்லையா? என்று கேட்டார்கள். கேட்டவர்கள் .. அக்கறையோடு கேட்டார்கள்.. அதற்கு அப்போது பதில் கொடுத்தாலும் சில விஷயங்கள் நமது பண்பாட்டில் ஆழ்ந்த அர்த்தம் உடையது.. சிந்தித்தால் வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கும்.. சிந்தித்தால் தானே பிரச்னை.. அதனை மழுங்கடிக்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்று சில ஊடக நண்பர்கள் கிண்டலடித்தார்கள்.. நண்பர்களோடு பேசிகொண்டிருந்த போது கிடைத்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.. தாலி என்பது உறவை ஏற்படுத்துவது என்பதால் அது புனிதமாகிறது.. தாய் மகன் என்பது தூப்பில் கொடி உறவு என்பார்கள்.. தந்தை உறவு என்பதை ரத்த சம்பந்தமான, தன்னிலிருந்து தோன்றிய உறவு என்பார்கள்.. சகோதர உறவு என்பது ஒரே வயிற்றில் தோன்றிய உறவு.. ஒரு தாயின் பாலைக் குடித்து வளர்ந்த உறவு என்பார்கள்.. ஆனால் கணவன், மனைவி என்பதற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது எனக் கேட்டால்.. ஒருவன் கட்டிய தாலியை அந்தப் பெண் உயிரினும் மேலாக கருதுகிறாள்… விசித்திரமாக இருக்கும்.. பல நூறு படங்களில் தாலி செட்டிமெண்ட் விதவிதமாக காட்டியிருப்பார்கள்.. பிடிக்காவிட்டாலும் பந்தப்படுத்துவதை.. தெரியாமல் கட்டிவிட்டாலும் தாலி புனிதமானது.. தாலிக்கு ஏதாவது நேர்ந்தால் கணவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழுமோ.. தாலி வரம் கேட்பது.. கட்டாய திருமணத்தில் கூட தாலி கட்டிவிட்டால் பிறகு எதுவும் செய்யமாட்டாள் என்பதாக.. இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏன் படம் ஆக்கி வெற்றி படமாக்கினார்கள்.. காரணம் மக்களின் நம்பிக்கை.. அசைக்க முடியாத நம்பிக்கை.. இரண்டு படங்களில் மட்டுமே வித்தியாசப்படுத்தி காட்டினார்கள் .. ஒன்று நானே ராஜா நானே மந்திரி என்ற விஜயகாந்த் படம்.. அதில் கதாநாயகி முரடனான கதாநாயகனுக்குப் புத்தி புகட்ட அவன் வலுக்கட்டாயமாக கட்டிய தாலி அறுத்து அவன் மூஞ்சியிலேயே எறிவாள்.. அவனை அவளுக்கு பிடித்திருக்கும் ஆனாலும் அவன் முரட்டுத்தனமாக கட்டிய தாலி அவள் ஏற்கமாட்டாள்.. விஜயகாந்த் அந்தப் படத்தில் நன்றாக நடித்திருப்பார்.. படக்கதையும் நன்றாக இருக்கும்.. பாடல்கள் அருமை தான்.. ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ஆன்டி கிளைமாக்ஸாக ஆனதால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.. அதேபோல் .. சாதாரண பட்ஜெட் படம் அந்த ஏழு நாட்கள்.. அந்தப் படத்தில் ஒருவனை விரும்பிய பெண்ணை தனது தாய் உயிருக்குப் போராடும் வேளையில், தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய கல்யாணம் செய்துகொண்டு வந்தவர், தனது தாய் இறந்த பின் அந்தப் பெண் விரும்பியவருக்கே திருமணம் செய்து கொடுக்க எடுக்கும் முயற்சியில்.. ஒரு வசனம் வரும்.. எனது காதலி உங்கள் மனைவி ஆகலாம்.. ஆனால் உங்கள் மனைவி எனது காதலியாக முடியாது.. அப்படியே நான் ஏற்றுக்கொள்ள தயார்.. எப்படி அவள் உங்களிடம் வந்தாளோ அதேபோல் எனக்கு அவளை தாருங்கள் என்பார் கதாநாயகன்.. அதாவது நீங்கள் கட்டிய தாலியை எடுத்துக்கொண்டு அவளை தாருங்கள் என்பார்.. சரி என அந்த நபர் தாலியை கழற்ற முற்படும்போது அவள் உயிரே போனாலும் அதனை தொட விடமாட்டேன் என்பார்.. அப்போது, கதாநாயகனாக வரும் பாக்யராஜ் கூறுவார் இதுதான் தாலி பெண்கள் கொடுக்கும் மதிப்பு.. என்று.. சரி அதனால் நாய்க்கு, கழுதைக்குத் திருமணம் செய்து வைக்க தாலி கட்டலாமா? கட்டலாம்.. நாம் எல்லா உயிரினங்களையும் இறை வடிவமாககத்தானே காண்கிறோம்.. இதில் என்ன உயர்வு தாழ்வு.. சிலருக்கு ஜாதக தோஷம் இருக்கு என்பதால் வாழை மரத்திற்குத் தாலி கட்டச்சொல்வார்கள்.. சில இடங்களில் வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் செய்து வைப்பார்கள்.. சில கிராமங்களில் மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் நடத்தும் பழக்கம் இருக்கிறது என்பதை பத்திரிகையில் படித்திருப்போம்.. அப்படியானால் தாலியின் புனிதத்தைக் கெடுக்கிறார்கள் என்பதா அர்த்தம் திருமண பந்தத்தை மனிதர்கள்.. தமிழர்கள்.. தாலி எனும் பந்தத்தால் (கட்டால்) உறுதி படுத்துகிறார்கள்.. அதை புனிதமான சடங்காகக் கருதுகிறார்கள்.. காக்கை குருவி எங்கள் ஜாதி.. கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்றான் பாரதி.. அப்படியிருக்கையில் தாலியை தரக்குறைவாக நினைத்தால் அது மனிதனாக இருந்தாலும் தாலியை உயர்வாக நினைக்கும் தாய்குலம் மன்னிக்குமா? மற்றவர்களுடைய நம்பிக்கையை கொச்சைப்படுத்த இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது..
- இவ்வாறு ராம.கோபாலன்கூறியுள்ளார்.



