ஆட்டம் போட்டு அசத்தும் அம்பயர்!

dancing umpire - 2026

கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களின் பங்கு அளப்பறிய ஒன்று என்பது நம்மில் பலரும் அறிந்ததுதான்.

இவர்களின் பணி மைதானம் தயார் நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்வது முதல், வீரர்களின் அப்பில்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குவது வரை தொடர்கிறது.

களத்தில் உள்ள வீரர்கள் அதிக அழுத்தம் கொடுக்கும் போதிலும், அவர்களுக்கு சாதுர்யமான முடிவுகளை இவர்கள் வழங்குகின்றனர்.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது பார்வையாளர்கள் ஆட்டக்காரர்களையும் பந்தின் அசைவையும் தான் பார்க்கிறார்கள்.

பந்து வீசும் அணியினர் அல்லது பந்து வீச்சாளர்கள் நடுவரிடம் அப்பில் செய்யும் போது தான் அவர்களின் பார்வை நடுவரை நோக்கி நகர்கிறது.

இருப்பினும், சில கிரிக்கெட் நடுவர்கள் தங்களது சிறப்புத் திறமை மற்றும் செயல்திறன்களால் பார்வையாளர்களின் கவனத்தை அடிக்கடி பெறுகின்றனர்.

அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது தீர்ப்பளிக்கும் சிறப்பான பாணியால் மிகவும் பிரபலமான நடுவராக ‘பில்லி பவுடன்’ அறியப்படுகிறார்.

ALSO READ:  பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

இவருடையாக நீட்டிச்சியாக இன்னும் சில களநடுவர்களை நாம் பார்த்தது உண்டு. இதில், கடந்த டிசம்பரில், இந்தியாவின் மகாராஷ்டிராவில் நடந்த புரந்தர் பிரீமியர் லீக்கின் போது, நடுவர் ஒருவர் ‘வைட்’ என சிக்னல் அளிக்க, கைகளுக்குப் பதிலாக கால்களைப் பயன்படுத்தி இருந்தார்.

இதன்மூலம் அவர் பார்வையளர்களின் கவனத்தை பெற்றிருந்ததோடு, அவரது வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு நெட்டிசன்களின் பாராட்டையும் பெற்றது.

இந்த நடுவரைப்போலவே, ஒடிசா கிரிக்கெட் நடுவர் ஒருவர் பார்வையளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு இணையத்தையும் கலக்கி வருகிறார்.

ஒடிசாவின் நடன நடுவர்’ என அழைக்கப்படும் அவருடைய பெயர் பப்லு சாஹு. இவர் அம்மாநிலத்தில் உள்ள தேன்கனல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

19 வயதான பப்லு சாஹு பரஜாங்கா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு அறிவியல் படித்து வருகிறார். இசையின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடும் இவர் ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் அடையாளம் காட்டுகிறார்.

மேலும், தனது நடன அசைவுகளால் ‘ஃபோர் ரன்’, ‘சிக்ஸ் ரன்’ மற்றும் ‘அவுட்’ என்று சைகை செய்து அசத்துகிறார்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

இப்படி தனது நடன அசைவுகளால் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் பப்லு சாஹுக்கு பல்வேறு இடங்களில் இருந்து நடுவராக வாய்ப்பு வரத் தொடங்கியுள்ளது.

மேலும், அவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

பப்லு சாஹு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். நடுவராக பணியாற்றி கிடைக்கும் வருமானத்தை தனது கல்விக்காக செலவிட்டு வருகிறாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories