பாதுகாப்பு ஆப்பில் பாதுகாப்பின்மை: இந்த மால்வேர் ஆப் இருந்தா… அன்இன்சால் பண்ணுங்க!

Hacker - 2026

Two-factor authentication என்பது பல செயலிகளில் தற்போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை ஆகும்.

பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகளில் மட்டுமல்லாது சில பேங்கிங் ஆப்களிலும் இது உள்ளது. குறிப்பிட்ட செயலியை பயன்படுத்துவது அந்த போனின் உரிமையாளர்தானா என்பதை உறுதிப்படுத்தவே இந்த Two-factor authentication.

இந்த முறையை கையாள சில ஆப்களும் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. அப்படியான ஒரு ஆப் தான் ‘2FA Authenticator’. பாதுகாப்பு அம்சமாக இருந்த செயலியே தற்போது பாதுகாப்பு இல்லை என கூகுள் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களை அச்சுறுத்தும், தகவல்களை திருடும் மால்வேர் 2FA Authenticatorக்குள் நுழைந்துள்ளது.

2FA Authenticator என்ற இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டு 15 நாளுக்குள் 10ஆயிரம் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னரே மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த செயலியை கூகுள் நீக்கியுள்ளது.

இந்த Vultur மால்வேர் செல்போனுக்குள் நுழைந்து பாதுகாப்பு அம்சங்களை திருடும். அதாவது பேங்கிங் செயலிகளில் பயன்படுத்தப்படும் யூசர் நேம், பாஸ்வேர்டுகளை திருடுவது, ஓடிபியை கையாள்வதுபோன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை திருடும்.

app - 2026

கிட்டத்தட்ட 35 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. அனைத்தும் பாதுகாப்பு என்றெல்லாம் சொல்ல முடியாமல் பாதுகாப்பு அம்சங்களில் சொதப்புகிறது கூகுள்.

ஒவ்வொரு நொடியும் ரிவியூ செய்யப்பட்டு அனைத்து செயலிகளையும் கூகுள் கண்காணித்தாலும் கூகுளின் கண்ணில் மண்ணைத் தூவி மால்வேர்கள் நுழைந்து விடுகின்றன.

அதனை கண்டுபிடிப்பதற்குள் பல ஆயிரம் டவுன்லோடுகள் செய்யப்பட்டு விடுகின்றன. அதனால் மிக முக்கியமான தேவைக்கான முக்கிய செயலியை மட்டுமே நாம் பயன்படுத்துவது ஆகச் சிறந்தது.

ஏற்கெனவே ப்ளோபோட் மால்வேர் ஆண்ட்ராய்ட் பயனர்களை அச்சுறுத்தியது. `ஃப்ளூபோட்’ மால்வேர் உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் நுழைந்தால் உங்கள் கிரெடிட் கார்ட் விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள், எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள், பிரவுசர் தகவல்கள் முதலான பலவற்றையும் பார்க்க முடிவதோடு, அவற்றைக் கசிய வைக்கவும் முடியும்.

உங்கள் ஸ்க்ரீனில் திடீரென காட்டப்படும் செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் எனக் கூறும் லிங்க் எதையும் க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் ஆகியவற்றை இன்ஸ்டால் செய்யப் பல்வேறு இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டியது இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories