இராணுவத்தினருக்கு இலவசம்! நாட்டுப்பற்றை வெளிபடுத்தும் ஜுஸ் கடைக்காரர்!

sai juice shop - 2026

பெங்களூரின் பழச்சாறு கடை ஒன்றில், ‘ராணுவத்தினர் எந்த பொருளை வாங்கினாலும், பணம் கொடுக்க தேவையில்லை’ என, கடை முன் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

குடகைச் சேர்ந்த சாய் ஜூஸ் சென்டரின் உரிமையாளர், இந்திய ராணுவ வீரர்களுக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கடை உரிமையாளரின் நாட்டுப்பற்றை, பலரும் பாராட்டுகின்றனர். கர்நாடகாவில் கொரோனா பரவிய பின், சிறு வியாபாரிகள் நெருக்கடியில் சிக்கினர். குறிப்பாக பழச்சாறு கடைகள், பெருமளவில் நஷ்டமடைந்தன.

juice shop - 2026

இன்னும் நஷ்டத்திலிருந்து மீளவில்லை. இது போன்ற கடினமான சூழ்நிலையிலும் கூட, பழச்சாறு கடை உரிமையாளர் ஒருவர், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி, மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.

பெங்களூரு மல்லேஸ்வரம் விளையாட்டு மைதான இடது புறத்தில், ‘சாய் ஜுஸ் சென்டர்’ என்ற கடை உள்ளது. இக்கடையில், ‘ராணுவத்தினர் என்ன வாங்கினாலும், பணம் கொடுக்க தேவையில்லை’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத கடை உரிமையாளர் கூறியதாவது: நாம் இங்கு சுகமாக இருக்கிறோம் என்றால், அதற்கு நமது ராணுவத்தினரே காரணம்.

இந்த கடையை திறந்த நாளிலிருந்தே, ராணுவத்தினர் என்ன வாங்கினாலும் இலவசம். அவர்களிடம் பணம் வாங்குவதில்லை.

juice shop 1 - 2026

நம் நாட்டை நாம் மதிக்காவிட்டால், வேறு யார் மதிப்பர். ராணுவத்தினர் மீதான அன்பால் அவர்கள் பொருட்கள் வாங்கினால் பணம் பெறுவதில்லை.

என் பெயர் தேவையில்லை.நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். இதில் எந்த சிறப்பும் இல்லை. ராணுவத்தினரின் கஷ்டம், தியாகத்தின் முன்னே, நம் கஷ்டம் ஒன்றுமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories