March 25, 2025, 4:40 AM
27.3 C
Chennai

பீமனாக நடித்த பிரபல நடிகர் காலமானார்!

பிரபல நடிகர் பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் காலமானார்..
அவருக்கு வயது 74.

1988 இல் பி.ஆர்.சோப்ராவின் கிளாசிக் ‘மஹாபாரத்’ திரைப்படத்தில் பீமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரவீன் குமார் சோப்தி.

நடிகர் மட்டுமின்றி, விளையாட்டு, அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர்.. இவர் 50-க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கெல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த பீம்பாய் கதாப்பாத்திரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவிநாசி என்ற் கதாப்பத்திரத்தில் நடித்திருந்த நாகேஷை பீம் பாய் ஒரே கையில் தூக்கி செல்லும் இன்று வரை பிரபலமாக உள்ளது.

விளையாட்டு வீரரான இவர், ஆசிய அளவில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார்.

பிரவீன் குமார் சுத்தியல் மற்றும் வட்டு எறிதலில் பல்வேறு தடகள நிகழ்வுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1966 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்களை வென்றார். 1966 காமன்வெல்த் போட்டியின் போது சுத்தியல் எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இதனிடையே 2013-ல் தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பிரவீன் குமார் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, 2014ல், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இதனிடையே அவர் நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவரை வழவழைத்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும் இரவு 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் காலமானார். அவருக்கு மனைவி, மகள், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.

அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1

Entertainment News

Popular Categories