பாம்பை அசால்டாக பிடித்த பெண் வனப்பணியாளர்!

snake 2 - 2026

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பாம்புகளைப் பார்த்தாலே பெரும்பாலானோரின் நிலை மோசமாகிவிடும். ஆனால் பாம்புகளைக் கண்டு சிறிதும் பயப்படாத சிலரும் இருக்கிறார்கள்.

இவர்கள் பயப்படாமல் இருப்பது மட்டுமல்ல, பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த பாம்பை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

அப்படி பாம்பை அசால்டாக தனது கட்டுக்குள் கொண்டு வந்த ஒரு பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவில், காட்டில் ஒரு பெண் ஒரு நாகப்பாம்பை (Cobra Video) பிடிக்க முயல்வதைக் காண முடிகின்றது. பொறுமையாக முயற்சி செய்து, கவனம் சிதறாமல், இறுதியாக அந்த பாம்பை அழகாக பிடித்து விடுகிறார் அந்த பெண். இந்த வீடியோ வெளியானதில் இருந்தே மக்கள் இந்த வீடியோ பற்றி பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வனப்பகுதியில் ஒரு பெண் தன் குழுவுடன் நாகப்பாம்பு ஒன்றை மீட்க முயற்சிப்பதை காண முடிகின்றது. அந்தப் பெண் முதலில் பாம்பின் வாலைப் பிடிக்கிறார்.

பின்னர் ஒரு மரக்கிளையின் உதவியுடன் அதன் தலையை அழுத்தி அழுத்தி அதை மெதுவாக பைக்குள் செல்ல வைக்கிறார். அந்தப் பெண் பாம்பை பிடிக்கும் போது, ​​அவரது அணியில் உடன் இருப்பவர்களும் சற்று பயந்துதன் போகிறார்கள் என்பதை வீடியோவில் காண முடிகின்றது.

தூர நின்றுகொண்டு பெண்ணின் துணிச்சலை நம்ப முடியாமல் அவர்கள் காண்பது தெரிகிறது. ஆனால், அந்த பெண் மிகவும் தைரியத்துடன் அந்த பாம்பை பிடிக்கிறார்.

பாம்பை பிடிக்கும் அந்த பெண் ஒரு வனத்துறை அதிகாரி என்றும் அவர் பெயர் ரோஷ்ணி என்றும் வெளியிடப்பட்டுள்ள வீடியோவுடன் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுடன், “ரோஷ்னி, ஒரு துணிச்சலான வனப் பணியாளர். அவர் காட்கடாவில் மக்கள் குடியிருப்புகளில் இருந்து ஒரு பாம்பை மீட்டார். பாம்பு பிடிப்பதில் இவர் வல்லவர். நாடு முழுவதும் வனத்துறைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.” என்று எழுதியுள்ளார்.

இந்த வீடியோ (Viral Video) 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 200 முறைக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories