ஆபத்து.. இந்த ஆப்பை உங்க மொபைலிருந்து தூக்குங்க..!

google play store - 2026

ஸ்மாரட்போனைப் பாதுகாக்கும் செயலிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக கவனமாக இருக்க வேண்டும் எனவும், இல்லாவிடில் நீங்கள் பயன்படுத்தும் செயலிகள் உங்களது வங்கி தகவல்கள் உள்பட அனைத்தையும் திருட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

இன்றைய நவீன உலகத்தில் ஒரு மனிதர் நாளொன்று சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாகவும், ஒரு சிலர் 24 மணிநேரம் கூட தங்களது ஸ்மார்ட்போன்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.

இதனால் சில சமயங்களில் போன்களில் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தங்களுடைய விலைமதிக்கத்தக்க ஸ்மார்ட்போன்களை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க இரண்டடுக்கு பாதுகாப்பு முறைகளை பலர் பின்பற்றி வருகின்றனர்.

இதனால் மக்களின் வசதிக்காக பல செயலிகள் கூகுள் ஆன்ட்ராய்டு ப்ளே ஸ்டோரிலே கிடைக்கிறது. பல செயலிகள் இலவசமாகவும் கிடைக்கும் சூழலில், பலர் உடனே டவுன்லோடு செய்துப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.

இந்த நடைமுறை தான் தற்போது பல சைபர் கிரைம் குற்றங்களுக்குக் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னதாக அவற்றின் நம்பகத்தன்மையை நாம் உறுதிப்படுத்துவதில்லை.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

கூகுளில் உள்ளது தானே என்ற நம்பிக்கையுடன் பயன்படுத்த தொடங்குகிறோம். இதனைப்பயன்படுத்தி பல செயலிகள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு தரவுகள் அனைத்தும் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

குறிப்பாக சமீபத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில், ப்ரேடோ (Praedo) என்ற இரண்டடுக்கு பாதுகாப்பு செயலி நுழைந்ததும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கு தரவுகள் கசிந்ததாக அதிர்ச்சித்தகவல் வெளியானது.

இதனையடுத்து உடனடியாக இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம். ஓபன் சோர்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயலியில் வல்டர் எனும் மால்வேர் பேக்கேஜிலிருந்து இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இணைப்புகளின்றி நிறுவப்பட்டிருக்கும் இந்த தகவல் சாதனத்தில் இருக்கும் வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் திருடும் வல்லமைப்பெற்றுள்ளது. இது RAT வகை, அதாவது தீங்கிழைக்கும் ரிமோட் அக்சஸ் ட்ரோஜன் என்று பொருள்படும்.

எனவே உங்களது வங்கிக் கணக்கு உள்பட சுய விபரங்கள் திருடப்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்துள்ள செயலியை உடனடியாக நீக்க கூகுள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இதோடு மட்டுமின்றி உங்களது ஸ்மோர்ட்போனுக்கு இரண்டடுக்கு அங்கீகாரப் பாதுகாப்பு தேவைப்பட்டால், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள பிரத்யேக கூகுள் ஆதெண்டிகேட்டர் (Google Authenticar) செயலியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உங்களது ஸ்மார்ட்போனில் தகவல்கள் திருடப்படாமல் இருக்க வேண்டும் என்றால், ரயில்நிலையம், ஒட்டல்கள், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைப் வசதியைப் பயன்படுத்தாதீர்கள். இதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் எனவும் வல்லுநர்கள் அறிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories