February 10, 2025, 6:12 PM
28 C
Chennai

அஜித்துடன் பணி.. ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்: இயக்குநர் மனு ஆனந்த்!

அஜித் கூறிய அறிவுரைகள் தனக்கு பெரும் உத்வேகமாக இருப்பதாக ‘எஃப்.ஐ.ஆர்’ இயக்குநர் மனு ஆனந்த் கூறியுள்ளார்.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இதில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். திரையரங்குகளில் பிப்ரவரி 11 வெளியாகுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இயக்குநர் கவுதம் மேனனுடன் 8 ஆண்டுகள் அசோசியேட்டாக பணிபுரிந்திருக்கிறேன். அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் பணிபுரிந்துள்ளேன்.

அவருடன் பணியாற்றியது ஒரு மிகப்பெரிய அனுபவம், அவர் கூறிய பல அறிவுரைகள் தான் என்னுடைய இந்த பயணத்தில் பெரும் உத்வேகமாக இருக்கின்றன.

ஒரு மனிதராகவும், நடிகராகவும், அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அவருடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் என்று நினைக்கிறேன்.

2015ஆம் ஆண்டு தீவிரவாதம் பற்றிய ஒரு கதையை எழுதினேன். ஆனால் அது படமாக மாறவில்லை. அதன் பின்னர் 2018 அந்த கதையில் சில திருத்தங்கள் செய்து அதை ‘எஃப்ஐஆர்’ கதையாக மாற்றினேன்.

இக்கதையை விஷ்ணு விஷாலிடம் நான் சொல்லும்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவரே இப்படத்தை தயாரிக்கவும் முடிவு செய்தார்.

இப்படத்தில் உங்களுக்கு ஒரு சின்ன ரோல் இருக்கிறது என்று நான் கவுதம் மேனனுக்கு மேசேஜ் அனுப்பினேன்.

அவர் உடனடியாக ‘எப்போது படப்பிடிப்புக்கு வரவேண்டும்’ என்று சொல் என்று ரிப்ளை செய்தார். என்மேல அவர் வைத்திருந்த நம்பிக்கையும், எனக்கு அவர் கொடுக்கும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய விஷயங்கள். இவ்வாறு மனு ஆனந்த் கூறியுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

தில்லி தேர்தல் முடிவுகள்; சாதனைகளும் சறுக்கல்களும்!

தில்லி தேர்தல் முடிவுகள்; சாதனைகளும் சறுக்கல்களும்!

Entertainment News

Popular Categories