பைக்கில் செல்லும் போது எதிர்ப்பட்ட சிங்கம்..! உறைந்து போன நபர்!

Published:

lion 4 - 2026

காட்டு விலங்குகளே அஞ்சும் சிங்கம் ஒன்று சாலையில் வந்தால் எப்படி இருக்கும். இது போன்ற ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில் காணப்படுகிறது.

இந்த காணொளியில் ஒரு நபர் ஸ்கூட்டியில் பயணிக்கிறார், அப்போதுதான் காட்டில் சிங்கம் ஒன்று ஸ்கூட்டியின் முன் வீரு நடை போட்டுக் கொண்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

காட்டின் நடுவில் உள்ள சாலையில் ஸ்கூட்டி ஓட்டிச் செல்லும் நபர் திடீரென வாகனத்தை நிறுத்துவதைக் காணலாம். அவருக்கு முன்னால் ஒரு ஆபத்தான சிங்கம் வருகிறது.

சிங்கம் அவருக்கு முன்னால் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அங்கிருந்து வேறு பாதையில் செல்கிறது. இப்படியே சிங்கம் ஸ்கூட்டி ஓட்டுனரை தாக்காமல் அமைதியாக சென்று விடுகிறது.

நல்ல வேளை சிங்கிளாக வந்த சிங்கம், தன்னை வேட்டையாடமல் விட்டுச் சென்றதை நினைத்து அந்த நபர் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

சிங்கத்தின் இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோ 276க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவிற்கு பயனர்களும் பல விதமான கருத்துக்களைப் பகிர்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img